Thaimai trust cbe /தாய்மை அறக்கட்டளை

Thaimai trust cbe /தாய்மை அறக்கட்டளை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thaimai trust cbe /தாய்மை அறக்கட்டளை, 7/8, Kamatchi Nagar(Ext), Surya Nagar 1st Street, Sivalingapuram, Ondipudur, coimbatore, tamilnadu, Coimbatore.

Thaimai Trust undertakes social activities, provides free materialistic support to bereaved peoples in coimbatore(இலவச நீத்தார் சேவை), supporting poor peoples in education, medical expenses,helping natural disasters

💧 ஒரு துளி அக்கறை… ஆயிரம் மாணவர்களின் தாகம் தீர்க்கும் நம்பிக்கை! 🌿14.08.2026 அன்று, கோயம்புத்தூர் காமராஜர் சாலையில் அமை...
18/08/2026

💧 ஒரு துளி அக்கறை…

ஆயிரம் மாணவர்களின் தாகம் தீர்க்கும் நம்பிக்கை! 🌿

14.08.2026 அன்று, கோயம்புத்தூர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள தியாகி N.G. இராமசாமி நினைவு அரசு உதவி பெறும் பள்ளிக்கு, சுமார் ₹27,600 மதிப்பிலான புதிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை தாய்மை அறக்கட்டளை சார்பில் அமைத்து கொடுத்து மகிழ்ந்தோம்.

🏫 பள்ளியின் மாண்புமிகு தலைமை ஆசிரியர் திரு. சதாசிவன் அவர்கள் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, பள்ளியின் குடிநீர் தேவையை தாய்மை அறக்கட்டளை நேரில் அறிந்து கொண்டது.
ஆய்வு செய்தபோது, இக்குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் மூலம் தினமும் சுமார் 1,000 மாணவர்கள் பாதுகாப்பான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெறும் வாய்ப்பு இருப்பதை அறிந்து, இச்சேவைத் திட்டத்தை மகிழ்ச்சியுடன் முன்னெடுத்தோம். மேலும் பள்ளி இடைவேளைகளின் போது அனைத்து சிறுவர் சிறுமியர்களும் குடிக்க போதுமான நேரமும், சுத்தமான குடிநீர் மற்றும் குழாய்களும் இல்லாமல் இருப்பதை அறிந்தோம்.
அவர்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்க சுத்திகரிப்பு கருவிகளுடன் கூடிய டேங்க் அமைத்து கொடுத்தும், டேங்க் தாங்கியுள்ள இரும்பு கம்பிகளுக்கு பெயிண்ட் அடித்து, வடியும் குடிநீரை வீணாக்காமல் அதை wash basin போன்ற அமைப்பு ஏற்படுத்தி நீரை மரத்திற்கு பாசனம் செய்ய ஏற்பாடு செய்து கொடுத்தோம்.
💧💚

இது ஒரு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கிய நிகழ்வு மட்டுமல்ல…
நம் குழந்தைகளின் ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான கல்விச் சூழலுக்கான ஒரு சிறிய, ஆனால் அர்த்தமுள்ள முன்னெடுப்பு! 🌱

🤝 சேவையில் இணைந்த உள்ளங்கள்…
இந்த மகிழ்ச்சியான சேவை நிகழ்வில், தாய்மை அறக்கட்டளை ஆலோசகர்கள் திரு. ஈஸ்வரமூர்த்தி, திரு. மகேஸ்வரன், அறங்காவலர்கள் திருமதி சாரதா, திரு. கோவை சதீஸ், திருமதி மகேஸ்வரி மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள்.. முத்துக்குமார், சூலூர் மகேஸ்வரி, சூர்யா, VR மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும், PKPI சமூக ஆர்வலர் திரு. சந்திரசேகர் அவர்களும் இச்சேவை நிகழ்வில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார். 🙏🏻

இந்த அர்த்தமிக்க சேவை முயற்சிக்கு ஒத்துழைத்த பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சதாசிவன் அவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அனைவருக்கும் தாய்மை அறக்கட்டளையின் மனமார்ந்த நன்றிகள்! 🙏🏻💚

“நாம் வழங்குவது வெறும் குடிநீர் அல்ல…
அது தாகத்தைத் தீர்ப்பதோடு,
ஆயிரம் உயிர்களின் நலனையும் வளர்க்கும் அன்பின் துளி!” 💧🌿

🌱 தாய்மை அறக்கட்டளை
அன்பு • சேவை • அர்ப்பணிப்பு
தாய்மை அறக்கட்டளை — சேவை உளமாற… ❤️

Thaimai Trust — Service Soulfully…

#தாய்மைஅறக்கட்டளை #குடிநீர்சுத்திகரிப்பு #பாதுகாப்பானகுடிநீர் #மாணவர்நலன் #கல்விசேவை #சமூகசேவை #கோயம்புத்தூர் #அன்புசேவை #சேவைஉளமாற

🌿 நீண்ட நாள் கோரிக்கை...நிறைவேற்றி கொடுத்த தாய்மை அறக்கட்டளை...🌿இருகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 2 கட்டில் 25 பி...
12/08/2026

🌿 நீண்ட நாள் கோரிக்கை...
நிறைவேற்றி கொடுத்த தாய்மை அறக்கட்டளை...🌿

இருகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 2 கட்டில் 25 பிளாஸ்டிக் சேர்கள் நன்கொடையாக வழங்கிய தாய்மை அறக்கட்டளை...

நீண்ட நாளாக தாய்மை அறக்கட்டளையிடம் கடிதம் வாயிலாகவும்,கைபேசி வாயிலாகவும் இருகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை செவிலியர் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகள் சிகிச்சை பெறவும், காத்திருக்கவும் போதுமான வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும்... அதற்கு உதவவும் கேட்டிருந்தார்கள்..

ஒரு அரசு மருத்துவமனைக்கு அத்தியாவசிய தேவையான பொருட்களை வழங்குவது என்பது.....
வெறும் நன்கொடை மட்டும் அல்ல…
அங்கே சிகிச்சைக்காக வரும் ஒரு நோயாளியின் உணர்வுகளை மதிப்பது.., அவர்களின் வலியை சற்றே குறைப்பது,
சகமனிதனுக்கு சிறிது வசதியை ஏற்படுத்துவது,
நோய் தீவிரத்தில் காத்திருப்பில் இருக்கும் நோயாளிக்கு “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று ஆறுதல் வழங்குவது போன்றது…

அதுவே உண்மையான மனிதநேயச் சேவை...
🙏🏻

அந்த எண்ணத்துடன்,
தாய்மை அறக்கட்டளை, கோயம்புத்தூர் இருகூர் கிராம அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு,
நோயாளிகள், சிகிச்சை செய்யும் செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக...ரூ 52,200 மதிப்பீலான

🛏️ 2 மருத்துவக் கட்டில்கள்
🪑 25 பிளாஸ்டிக் நாற்காலிகள்

ஆகியவற்றை 10.08.2026 திங்கட்கிழமை அன்று அன்புடன் வழங்கியது.

இந்த நிகழ்வு...

👨‍⚕️ மருத்துவர் உமர் பாரூக், MD (BMO) (அரசு ஆரம்ப சுகாதார நிலையம்)
🤝 திரு. ஆத்மா சரவணன் (சமூக சேவகர்)
📜 திரு. ஞானபிரகாசம்( திருவள்ளுவர் பேரவை)
🌿 திரு. ஈஸ்வரமூர்த்தி – ஆலோசகர்( தாய்மை அறக்கட்டளை)

ஆகியோரின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த சேவை முயற்சியை தாய்மை அறக்கட்டளையின் அறங்காவலர்கள்

🌿 திரு. கோவை சதீஸ்
🌿 திருமதி சாரதா
🌿 திருமதி மகேஸ்வரி

ஆகியோர் முன்னெடுத்தனர்.

மேலும், இந்த முயற்சிக்கு தங்களது நேரத்தையும் ஆதரவையும் வழங்கிய கார்த்திக், முத்துக்குமார், ஆண்டனி, பூமிகா, மயில்சாமி VR, சுகாதார நிலைய மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எங்களது இதயம் கனிந்த நன்றிகள்.

இதுதான் எங்களின் பார்வையில் மனிதநேயம்.

இந்தச் சிறிய உதவிகளுக்குப் பின்னால் இருக்கும் அன்பும் அக்கறையும்,
நிச்சயம் மிகப் பெரிய அர்த்தம் கொண்டவை. ❤️

தேவை இருக்கும் இடமெல்லாம்…
தாய்மையுடன் சேவை செய்வோம்.
முடிந்தவரை துணை நிற்போம்.
மனிதநேயத்தை விதைப்போம். 🌿

❤️ "தாய்மை அறக்கட்டளை சேவை இதயத்தில் இருந்து..!"

🙏 சேவை தொடரும்…🙏

#தாய்மைஅறக்கட்டளை #சேவையேஎங்கள்பயணம் #மனிதநேயம்
#இருகூர் #கோயம்புத்தூர் #ஆரம்பசுகாதாரநிலையம் #சமூகசேவை #மருத்துவசேவை #மக்கள்நலம் #அன்புடன்சேவை #சேவைதொடரும்

*Faces Unknown to the World...**Hearts Known to Humanity..*Every day, my phone is occupied not by cheerful conversations...
30/07/2026

*Faces Unknown to the World...*
*Hearts Known to Humanity..*

Every day, my phone is occupied not by cheerful conversations, but by calls carrying the heartbreaking news of someone losing a beloved family member.
When such calls come, I set aside my own personal circumstances and emotions. My only priority is to listen with compassion and stand beside the grieving family during their darkest moments.

Our first questions are always:
When did your loved one pass away?
What support do you need immediately?
Often, families are too overwhelmed by grief to remember everything they require. So, with humility and care, we ask about the essentials they may have forgotten and ensure they receive them without having to ask.

For 99% of the bereaved families who contact us, we deliver our free funeral support services within one hour. These include a funeral canopy, chairs, a freezer box, dining tables, tea flasks, lighting arrangements, death certificate application forms, and every other essential item needed during such difficult moments.

Long before many relatives arrive, Thaimai Trust reaches the home as the family's first extended hand of support—setting up everything they need, offering comfort, and standing with them in silence and compassion.
To date, we have completed more than 2,700 free funeral support services, serving 24 hours a day, 7 days a week, without a single day of interruption.

During an award ceremony, a friend who runs another charitable organization asked me with genuine surprise:
"We struggle to gather volunteers even for one public service event a month. How do your volunteers come every single day with the same enthusiasm and dedication, without ever showing hesitation?"

I smiled and replied,
"I have told them only one thing."
Curious, he asked, "What is that one thing?"
I proudly answered,
"In our early days, it was difficult to motivate volunteers to visit homes where someone had passed away. So I told them this: 'If someone you dearly loved in your own family passed away, you would leave everything behind and rush to be there, doing whatever was needed without a second thought. Every family that calls us deserves that same love, urgency, and compassion. That is the true meaning of social service.' "

He stood speechless for a moment, then shook my hand warmly and congratulated us from his heart.
The reason this service continues today is because the members of Thaimai Trust carry that spirit of compassion. They willingly and selflessly visit grieving families without hesitation, treating every loss as though it were their own.

Every day, we receive between four and ten requests for free funeral support. Every call is answered with patience, kindness, and sincere care.
When we collect our service materials after three days, we ask families only one question: "Was our service helpful to you?"
We have never asked anyone for a donation in return for our services.
For those three days, our canopy, chairs, and support materials quietly remain with the family, offering them a small measure of comfort while they mourn.
Some mornings may pass without a single call carrying good news...
But almost every day, at least two calls come requesting help after the loss of a loved one.

We rarely post
about every funeral support service we provide because we do not know how everyone may perceive such posts.
Today, however, I felt it was important to share this—not for recognition, but to reassure every family that Thaimai Trust continues to serve tirelessly, standing beside people during life's most painful moments.
Just as you love yourself...
Let us also love, care for, and stand beside one another.

Thank you.

#9159158155

*பிரபலமில்லாத முகங்கள்..* தினமும் நேசித்த உறவுகள் உயிர் நீத்ததை சொல்லி வரும் இறப்பு செய்திகள் மட்டுமே ஒரு நாளை ஆக்கிரமித...
27/07/2026

*பிரபலமில்லாத முகங்கள்..*

தினமும் நேசித்த உறவுகள் உயிர் நீத்ததை சொல்லி வரும் இறப்பு செய்திகள் மட்டுமே ஒரு நாளை ஆக்கிரமித்து கொள்ளும்.
அழைக்கின்ற நபரின் நெகிழ்வான சூழலை கருத்தில் கொண்டு... நானிருக்கும் சொந்த சூழலை பெரும்பாலும் புறந்தள்ளி விட்டு சமநிலையில் அவர்களுடன் உரையாடலை தொடர்வேன்.

எப்போது இறந்தார்கள்..?
என்ன என்ன சேவை பொருட்கள் தேவைப்படும்..?
இறந்த வீட்டிற்கு தேவையாய் இருக்கும் அவர்கள் கேட்க மறந்து போன பொருட்களையும் நாமே பணிவாக கேட்டு அதையும் வழங்கி உதவுவோம்.

99% இறப்பு வீடுகளுக்கு 1 மணி நேரத்திற்குள் இலவச நீத்தார் சேவை பொருட்களான துணி பந்தல், நாற்காலி, பதப்படுத்தும் பெட்டி(Freezer Box),டைனிங் டேபிள், டீ பிளாஸ்க், லைட்,இறப்பு சான்றிதழ் படிவம் என அனைத்தையும் கொண்டு சேர்க்க உறுதி எடுத்து அதை இன்று வரை சரியாக செய்து உள்ளோம்.

சொந்தக்காரங்க வருவதற்கு முன்னால் தாய்மை அறக்கட்டளை இறப்பு வீட்டில் முதல் சொந்தமாய் வந்து நீத்தார் சேவை அமைத்து கொடுத்து ஆறுதல் வழங்கி திரும்பும். இதுவரை 2700 நீத்தார் சேவைகள் கடந்து விடுப்பு நாள் இல்லாமல், 24x7 இரவு பகல் என சேவை வழங்கி வந்துள்ளோம்.

ஒரு விருது பெறும் நிகழ்வில் மற்றொரு பொதுநல அமைப்பை நடத்தி வரும் நண்பர் கேட்டார்.
"மாசம் ஒரு பொது நல நிகழ்ச்சி நடத்த ஆள் சேர்க்க பெறும் பாடாய் இருக்கும் போது...எப்படி தினமும் எந்த சுணக்கமும் காட்டாமல் ஊக்கமுடன் வந்து சேவை செய்கிறார்கள் உங்கள் அறக்கட்டளை நண்பர்கள்..?" என ஆச்சர்யமாய்கேட்டார்.

"நான் அவர்களுக்கு சொல்லி வைத்துள்ளது ஒரே ஒரு விஷயம் மட்டும்தான்..!"என்றேன்.

அவர் "அது என்ன ஒரே ஒரு விஷயம்..?"என அறிந்து கொள்ளும் ஆவலோடு கேட்டார்.

நான் பெருமிதத்தோடு சொன்னேன் "ஆரம்ப காலங்களில், இறந்த வீட்டிற்கு போய் சேவை வழங்க அக்கறையுள்ள தன்னார்வலர்களை ஒருங்கிணைக்க....கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்தது. பிறகு அவர்களிடம் "உங்கள் வீட்டில் நீங்கள் மிக நேசித்த ஒரு உறவு இறந்து போனால்... நீங்கள் எந்த அளவிற்கு சொந்த வேலைகளை அப்படியே விட்டு விட்டு ஓடி போய் வேண்டியதை செய்வீர்களோ... அந்த அக்கறை நமக்கு வரும் ஒவ்வொரு இறப்பு வீடுகளுக்கும் சென்று உதவ உறுதி கொள்ள வேண்டும்..அதுதான் உண்மையான சமூக சேவை...!" என்ற கனிவான வரிகளை அன்போடு எடுத்து சொன்னேன்.

அதை கேட்டு அவர் கண்கள் விரிய கைகுலுக்கி உளமார வாழ்த்தி சென்றார்.

பெரும்பாலான தாய்மை உறுப்பினர்கள் மிக அர்ப்பணிப்போடு இறந்த வீட்டிற்கு சென்று உதவ எந்த நெருடலும் இல்லாமல் வருவதால் தான் இந்த சேவை தொடர்ந்து வழங்க முடிகிறது.

தினமும் 4 முதல் 10 இலவச நீத்தார் சேவைகள் கேட்டு அழைப்புகள் வரும். அத்தனை அழைப்புகளையும் மிக கவனமுடன் கேட்டு வேண்டிய உதவிகளை மிக கனிவோடு வழங்கி வருகிறது தாய்மை அறக்கட்டளை.
சேவையை திரும்ப பெறும்போது " சேவை எப்படி உதவியாய் இருந்தது என்ற கருத்துக்களை பதிவு செய்ய கேட்போம் அல்லாமல் அறக்கட்டளை சேவைக்கு நன்கொடை வழங்க கேட்டதில்லை.
3 நாட்களுக்கு அவர்கள் வீட்டில் இருக்கும் பந்தல், சேர்கள் மற்றும் சேவை பொருட்கள் அமைதியாக அவர்களின் துக்கம் குறைக்க இளைப்பாறுதலை வழங்கி திரும்பும்.

காலையில் நல்லதாய் நாலு நற்செய்திகள் சொல்ல அழைப்பு வருமோ இல்லையோ..
நிச்சயம் இறப்பு செய்தி சொல்லி உதவி கேட்டு இரண்டு அழைப்பாவது வந்திருக்கும்.

ஒவ்வொரு நாளும் வழங்குகின்ற நீத்தார் சேவை செய்திகளை விளக்கி பதிவு போடுவதில்லை.ஏனென்றால் எல்லாரும் அதை எப்படி எடுத்து கொள்வார்கள் என்ற எண்ணமே காரணம்.

ஆனால் நமக்கு இக்கட்டான சூழலில் உதவிய நல்லுள்ளங்களுக்கு தாய்மை அறக்கட்டளை சோர்வின்றி சேவைகள் வழங்கி வருகிறது என்ற உண்மையை எடுத்து கூறவே இந்த பதிவு.

உங்களை நீங்கள் நேசிப்பது போல..
அடுத்தவர்களுக்கும் அன்பு செய்வோம்.நேசிப்போம்.

நன்றி


#9159158155
#இலவசநீத்தார்சேவை


🙏🏻🙏🏻🙏🏻

17/06/2026


#9159158155

17/06/2026

ஏழைகள் வீட்டு இறப்பு நிகழ்விற்கு உறவாக சென்று அவர் துன்பத்தை ஆற்றுப்படுத்தும் தாய்மை அறக்கட்டளை...

#இலவசநீத்தார்சேவை



"6ம் ஆண்டு ஓவிய போட்டி""6th Year Drawing Competition"தாய்மை அறக்கட்டளை சார்பாக "உலக புகையிலை ஒழிப்பு தினம்(மே 31)" மற்று...
06/06/2026

"6ம் ஆண்டு ஓவிய போட்டி"
"6th Year Drawing Competition"

தாய்மை அறக்கட்டளை சார்பாக "உலக புகையிலை ஒழிப்பு தினம்(மே 31)" மற்றும் "உலக சுற்றுச்சூழல் தினம்"(ஜூன் 5) ஆகியவற்றை முன்னிட்டு மே 24/5/2026 அன்று கோவை தியாகி NG ராமசாமி நினைவு மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது.

பள்ளி மாணவர்கள் 1 ம் வகுப்பு முதல் 12m🙏🏻வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி நடத்த வேண்டும் என முடிவு செய்தவுடன், அதற்கான முன் ஆயுத்த பணிகளை ஒரு வாரம் முன்னதாகவே நிகழ்விற்கு வேண்டியதை பட்டியலிட்டு செயல்படுத்த துவங்கினோம்.

ஓரு மாதம் முன்பாகவே மாணவர்களும் பெற்றோர்களும் அறக்கட்டளை எண்ணில் அழைத்து போட்டி குறித்து விசாரிக்க துவங்கி விட்டார்கள்.

ஓவியப்போட்டிக்கு வரும் மாணவர்களுக்கு குடிநீர் வசதி, பதிவு செய்ய தனித்தனி பிரிவுகள், அவர்களை வரவேற்க சுவையான பச்சை காய்கறி சூப்,ரம்மியமான சூழல் என அனைத்தும் ஏற்படுகள் செய்யப்பட்டு இருந்தது.

ஓவிய போட்டிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக
திருவள்ளுவர் பேரவை திரு ஞானபிரகாசம் அவர்கள், புற்றுநோய் சிறப்பு மருத்துவர் அரிமா அன்பு அவர்கள்(Royal Care Hospital),
திருமதி M. சரண்யா தேவி அவர்கள் (District To***co control Cell), திரு முரளிகிருஷ்ணன் (District To***co control Cell), MindCare திருமதி பொன்மொழி(Psychological Councellor), Mindcare திருமதி எழில் (Psychological Councellor), திரு செல்வராஜ் (பசுமை பறவைகள்),திரு மருத்தாச்சலம் (சமூக ஆர்வலர்),திரு அங்குராஜு அவர்கள் (Sastha Constro Chemicals)(தாய்மை அறக்கட்டளை கெளரவ அறங்காவலர்), திரு ஈஸ்வரமூர்த்தி(தாய்மை அறக்கட்டளை கௌரவ ஆலோசகர்),
திரு மகேஸ்வரன்(தாய்மை அறக்கட்டளை கௌரவ ஆலோசகர்) மற்றும் திரு மதிவாணன் அவர்கள்(அரசு வக்கீல்)மற்றும் தாய்மை அறக்கட்டளை குழுவினரும் இருந்தனர்.

ஓவிய போட்டியின் நடுவர்களாக முகமலர்ச்சியோடு வருகை புரிந்த Dr ஐஸ்வர்யா அவர்களும், திரு விஸ்வநாதன் அவர்களும், திரு தெய்வீகன் அவர்களும் மாணவர்களுக்கு ஓவியங்கள் எப்படி வரைய வேண்டும்.? எப்படி தலைப்பை புரிந்து கொண்டு வரைவது..? ஓவியத்தின் அடிப்படை கூறுகள் பற்றியெல்லாம் எடுத்து கூறினார்கள்.

ஓவிய போட்டியின் இடையே பெற்றோர்களுக்கு "Parenting Tips" "How to Handle Adolescent Childrens..?""Avoiding mobile usage and Making healthy usage of Mobiles " குறித்து கேள்வி பதில் நிகழ்வாக மன நல ஆலோசகர்கள் திருமதி எழில் மற்றும் பொன்மொழி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

Royal care சிறப்பு புற்றுநோய் மருத்துவர் திரு அன்பு அவர்கள் புகையிலை மூலம் ஏற்படும் நோய்களின் அறிகுறிகள்,உடல் சார்ந்த பாதிப்புகள் குறித்து மாணவர்களிடையே எடுத்து கூறினார்.

மாவட்ட புகையிலை ஒழிப்பு பிரிவு அதிகாரி Dr சரண்யா தேவி அவர்கள் பள்ளிகளில் எப்படி புகையிலை நுழைகிறது..? அதை எப்படி அடையாளம் காண்பது... தவிர்ப்பது..? புகையிலை வைத்திருந்தால், பகிர்ந்தால் என்ன தண்டனை என்று எளிய தமிழில் விளக்கினார்.
அதனை தொடர்ந்து திரு முரளிகிருஷ்ணன் அவர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரையும் ஒருசேர "புகையிலை பயன்படுத்த மாட்டோம்" என உறுதி மொழி எடுக்கப்பட்டது.

பசுமை பறவைகள் திரு செல்வராஜ் அவர்கள் மரக்கன்றுகள் எவ்வாறு... எத்தனை நாளில் நட வேண்டும்.. குழி எந்த அளவில் எடுக்க வேண்டும் என்று சுருக்கமாக கொங்கு தமிழில் சிறுவர்களுக்கு எடுத்து கூறினார்.

அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு பரிசிலும் 27 முதல் 14 வரை ஆச்சர்யமூட்டும் பரிசுகள் பொதிந்து வைக்கப்பட்டு இருந்தது.பரிசுகள் கட்டாயம் அவர்களை ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசும், Glass Source Drawing ஒன்றும், சான்றிதலும் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் பெற்றோர்களும் மாணவர்களும் புகையிலை குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும் அறிந்து பயனுற வேண்டும் இந்நிகழ்வை தாய்மை அறக்கட்டளை முன்னெடுக்கிறது.
இவ்வருடமும் 106 மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு அடைந்து இருப்பார்கள் என்ற எங்களின் அகமகிழ்வை சொல்லில் விளக்க முடியாது.

நன்றி



***coday



#தாய்மைஅறக்கட்டளை

🙏🏻🙏🏻🙏🏻

🌱 தாய்மை அறக்கட்டளை (Thaimai Trust) 🌱"ஒரு சிறிய உதவி... ஒரு பெரிய மாற்றம்!"நமது சமூகத்தில் உதவி தேவைப்படும் பல குழந்தைகள...
31/05/2026

🌱 தாய்மை அறக்கட்டளை (Thaimai Trust) 🌱

"ஒரு சிறிய உதவி... ஒரு பெரிய மாற்றம்!"

நமது சமூகத்தில் உதவி தேவைப்படும் பல குழந்தைகள், முதியவர்கள் மற்றும் குடும்பங்கள் உள்ளனர். அவர்களின் வாழ்க்கையில் ஒரு புன்னகையை உருவாக்குவது நமது அனைவரின் பொறுப்பாகும்.

தாய்மை அறக்கட்டளை தொடர்ந்து கல்வி, சமூக நலன், விழிப்புணர்வு மற்றும் மனிதநேய சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.

🤝 நீங்கள் வழங்கும் சிறிய ஆதரவும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றக்கூடும்.

✨ மனிதநேயம் வளரட்டும்...
✨ அன்பும் கருணையும் பரவட்டும்...
✨ சமூக மாற்றம் நம்மிலிருந்தே தொடங்கட்டும்...

#தாய்மைஅறக்கட்டளை

🎨🌍 Our children are the heartbeat of our future, and their vision for a better world inspires us every day.On May 24, TH...
26/05/2026

🎨🌍 Our children are the heartbeat of our future, and their vision for a better world inspires us every day.

On May 24, THAIMAI TRUST proudly organized a Drawing Competition in Coimbatore, where young artists expressed powerful messages through creativity, imagination, and awareness.

As we approach 🚭 World No To***co Day and 🌱 World Environment Day, these students reminded us that a healthy life and a greener earth go hand in hand.

We are delighted to celebrate the talented young participants and winners whose artwork beautifully reflected the importance of:
✨ Healthy Living
✨ Environmental Protection
✨ Creativity & Awareness

This event was more than a competition — it was a meaningful step toward encouraging the next generation to think creatively and responsibly for a better tomorrow.

Together, let us continue building a cleaner, healthier, and greener Coimbatore. 💚

***coDay

6ம் வருட விழிப்புணர்வு ஓவிய போட்டி குறித்து செய்தி வெளியிட்ட "தினமலர்" நாளிதலுக்கும், செய்தியாளர் சிவா அவர்களுக்கும் நெஞ...
22/05/2026

6ம் வருட விழிப்புணர்வு ஓவிய போட்டி குறித்து செய்தி வெளியிட்ட "தினமலர்" நாளிதலுக்கும், செய்தியாளர் சிவா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

🙏🏻🙏🏻🙏🏻




Address

7/8, Kamatchi Nagar(Ext), Surya Nagar 1st Street, Sivalingapuram, Ondipudur, Coimbatore, Tamilnadu
Coimbatore
641016

Alerts

Be the first to know and let us send you an email when Thaimai trust cbe /தாய்மை அறக்கட்டளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Thaimai trust cbe /தாய்மை அறக்கட்டளை:

Share