Aum herbal

Aum herbal மூலிகை மருந்தே விளங்குது சிறந்தே

09/09/2026
05/09/2026

திட்டுவிளை சுற்று வட்டாரத்ல
வந்த முதல் அழகு நிலையம்
இதுதான்.ஒரு சேர் ஒரே ஆளு ஒரே கட்டிங்.மதியம் வரைக்கும் இந்த கடை மதியத்துக்கு மேல நாவல்காட்ல
இருக்குற இன்னொரு கடைக்கு போய்டுவாங்க அய்யா.!

நான் நாப்பது ரூவா காலத்ல
இருந்தே இங்க முடி வெட்டிருக்கேன்.
இடையில ஒரு நாள் முடி வெட்ட
போகும் போது வழியில் பார்த்தவர்
போய் இருங்க வீட்டுக்கு மீன் வாங்கி குடுத்துட்டு வாரேன்னு போனதால
நான் வேற ஒரு புதுக்கடைக்கு போனேன். ...

Hair studio அங்க ஒரு பையன் இருந்தார்.தலைய ஷேவ் பண்ணிட்டு நடுவுல கீரிப்பிள்ளை விடுறது.ரெண்டு பக்கமஒவ்வொரு
டெடுத்து பிளேடால நடுவுல முடிய வழிச்சி விட்றதுன்னு பையன் டிரெண்டிங் வித்தையை எல்லாம் கத்துக்கிட்டு பக்காவா வேலை செஞ்சிட்டிருந்தார். அப்றம் பக்கத்துலயே பெரிய ஏசி சலூன் ஆரம்பிச்சிட்டு போய்ட்டார்.இப்ப அங்க அஞ்சாறு கட்டிங் சேர் கிடக்கு ஆனா வெட்டுறதுக்கு
ரெண்டு மூன்று பேர்தான் இருக்காங்க.எப்பவும் ஒரே கூட்டம்.

இந்த இடத்துல ஒரு சலூன்
இருந்தா நல்லா வரும்னு கணிச்சி கடை தளவாடங்களோட பையன் இருந்த முதல் கடையை ஆரம்பித்தவருக்கு இந்தத் தொழில் தெரியாது.அதனால
கடையை எடுத்து தான் பிக்கப் ஆன
உடனே பையன் பெருசா பக்கத்லயே வேறக் கடை போட்டதால
பழைய கடைக்காரர்
இப்ப கடையை பூட்டிப் போட்டுள்ளார்.
எனக்கு கட்டிங் தொழில் தெரிஞ்சா
நான் கூட இந்த இடத்துல கடைய 😍 ஆரம்பிச்சிடுவேன்.
தெரியாமப்போச்சே.!

புதுக்கடைக்கு போனதால பையன் ரெம்ப பிசி மேல் பிசி பிஸ் பிஸ் போன தடவ முடி வெட்டப் போனதும் காத்திருந்து கிட்டப்போன உடனே எனக்கு ரெம்ப ஜொரம் சாப்ட்டுட்டு மாத்திர போட்டுட்டு
வாரேன்னு சொன்னார்.
ஜொரத்துக்கு மாத்திரை போடுறவன எனக்குப் பிடிக்காது சோறு போடுற தொழில காக்க வெச்சிட்டு சாப்டப் போறவன சுத்தமா பிடிக்காது.அதனால வந்துட்டேன். நேற்று கிருஷ்ண ஜெயந்தி அதுவுமா மீண்டும் அங்கப் போனா
ரெண்டு பேர் வெட்ட ஏழு பேர் வெயிட்டிங் நம்ம ஜொரம் தம்பிய வேற காணல சரின்னு வந்துட்டேன்.
இன்னைக்கு போனா இப்பவும்
கூட்டம் சரின்னு மீன்
வாங்கப் போன அண்ணனே
பரவால்லனு இங்க வந்தேன் அய்யா ‌
ஒத்தச் சேர்ல உட்கார்ந்து கண்ணை மூடி அமர்ந்ததிருந்தார்.என்னைப் பார்த்ததும் வாங்க வாங்க ரெம்ப நாளச்சி எப்டி வெட்டன்னு கேட்டுட்டு 5 நிமிசத்ல கத்திரியையும் மின்சார செதுக்கியையும் வெச்சிப் பக்காவா வெட்டி வெட்டுட்டாங்க.
பையன்னா சைடு கோடு சரியாத்தெரிய பிளேட வச்சி வழிச்சி விடுவார்னு நினைச்சிட்டு அய்யாட்ட வகுடுக் கோடு பக்கம் வழிங்கனு சொன்னேன்.வழிக்க வேண்டாம் கத்திரிய வெச்சி அந்த இடத்த வெட்டி உடுறேன்னு வெட்டி விட்டாங்க.
ஹை நல்லாருக்குல்ல?

முன்னால சென்னை நுங்கம் பாக்கம் ரமேஷ் சலூன்ல ஒவ்வொரு
முடியா எடுத்து ஒரு மணி நேரம் வெட்டுவாங்க.
அப்றம் பின்பக்க முடி, ரெண்டு
கிருதா, பக்கவாட்டு ஓர முடிய
மட்டும் 15 நிமிசம்
வெச்சி என்னென்னவோ பண்ணுவாங்க.அப்றம் குளிச்சிட்டு
பாத்தா நான் விஜய் மாரியே இருப்பேன்.ஹே ன் அய்யாக்கு
அதெல்லாம் தெரியாது.!

-ஏகப்பிரியன்.

ஆதி





05/09/2026

📌 குடல்வால் (Appendix) — நாம் அறியாத உண்மைகள்! 🩺📍 இது உடலின் எந்தப் பகுதியில் உள்ளது?நமது வயிற்றின் கீழ் வலது பகுதியில் (Lower Right Abdomen), சிறுகுடலும் பெருங்குடலும் சந்திக்கும் இடத்தில் இந்தச் சிறிய விரல் போன்ற உறுப்பு அமைந்துள்ளது🛡️ இதன் உண்மையான பணி என்ன?நீண்ட காலமாக இது ஒரு தேவையற்ற உறுப்பு என நினைக்கப்பட்டது. ஆனால், இப்போதைய மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, இது உடலுக்கு நன்மை செய்யும் நல்ல பாக்டீரியாக்களின் 'சேமிப்புக் கிடங்கு' (Safe House for Good Bacteria) ஆகும். வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் நல்ல பாக்டீரியாக்கள் அழியும்போது, குடல்வால் தன் சேமிப்பிலிருந்து அவற்றை மீண்டும் குடலுக்குள் அனுப்பி செரிமானத்தைச் சீராக்குகிறது.மேலும், இதில் உள்ள நோய் எதிர்ப்புச் செல்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு (Immune System) பக்கபலமாக இருக்கின்றன. 💥 குடல்வால் எதனால் வெடிக்கிறது?குடல்வாலின் நுழைவுப் பகுதியில் மலம், தொற்று (Infection) அல்லது நிணநீர் முடிச்சுகளின் வீக்கம் காரணமாக அடைப்பு ஏற்படும்போது 'அப்பெண்டிசைட்டிஸ்' (Appendicitis) எனப்படும் குடல்வால் அழற்சி ஏற்படுகிறது. இந்த அடைப்பால் உள்ளே அழுத்தம் மற்றும் வீக்கம் அதிகரித்து, சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் குடல்வால் வெடித்து (Burst), நச்சுக்கள் வயிறு முழுவதும் பரவி உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.

✂️ வெட்டி எடுப்பதினால் ஏற்படும் பின்விளைவுகள் என்னென்ன?குடல்வாலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய பிறகும் மனிதர்கள் சாதாரணமாக வாழ முடியும். இருப்பினும், சமீபத்திய ஆய்வுகளின்படி சில நீண்ட காலப் பின்விளைவுகள் கண்டறியப்பட்டுள்ளது.குடல் நுண்ணுயிரிகளின் சமநிலையின்மை (Dysbiosis): நல்ல பாக்டீரியாக்களின் இருப்பிடம் நீக்கப்படுவதால், குடலில் உள்ள நுண்ணுயிர் சமநிலை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மாறலாம். செரிமானக் கோளாறுகள்: சிலருக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு அல்லது குடல் சார்ந்த அசௌகரியங்கள் வரலாம். நோய்த்தொற்று மற்றும் அழற்சி ஆபத்து: அரிதான சந்தர்ப்பங்களில், குடல் அழற்சி நோய்கள் (Inflammatory Bowel Disease) ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் சற்றே அதிகரிக்கிறது.

குடல்வால் ஆரோக்கியமாக இருக்க 5 நற்பழக்கங்கள்!நார்ச்சத்து (Fiber) மிகுந்த உணவுகள்: தினை வகைகள், காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிகளவில் உட்கொள்ளுங்கள். இது மலசிக்கலைத் தடுத்து குடல்வாலில் அடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும். அதிகப்படியான தண்ணீர்: தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது குடலின் இயக்கத்தைச் சீராக வைத்து நச்சுக்களை வெளியேற்றும்.புரோபயாடிக் உணவுகள் (Probiotics): தயிர், மோர், கம்பங்கூழ் போன்ற பாரம்பரிய நொதித்தல் உணவுகளைச் சேர்த்துக் கொள்வது குடலின் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும்.

சுத்தமான உணவுப் பழக்கம்: குடலில் கிருமித்தொற்று ஏற்படாமல் தடுக்க சமைக்காத தேங்காய்,பழங்கள்,
காய்கறிகள் அவல் போன்றவற்றை
உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.கூடவே வீட்டில் சமைத்த எளிதில்
ஜீரணமாகும் உணவுகளை உண்ணுங்கள்.
தவறாமல் தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி,யோகாசனப் பயிற்சி,விளையாட்டுப் பயிற்சிகளை செய்து வரவேண்டும்.

-ஏகப்பிரியன் DYT
ஆதி


💡

03/09/2026

📊 பானங்களின் pH அளவு:
ஓர் அறிவியல் பார்வை! 🥤🔬
நமது அன்றாட வாழ்வில் நாம்
பருகும் பானங்களின் அமில-காரத்
தன்மை (pH Value) எவ்வளவு தெரியுமா?

(pH 7 என்பது நடுநிலை, 7க்கு கீழே இருந்தால் அமிலம், 7க்கு மேலே
இருந்தால் காரம்).
இதோ முழுமையான
விபரம்:

🛑 மிகக் கடுமையான
அமிலத்தன்மை (Highly Acidic):

🍎 ஆப்பிள் சீடர் வினிகர்: pH 2.5 - 3.0 (அசிட்டிக் அமிலம் நிறைந்தது, பற்களைப் பாதுகாக்க ஸ்ட்ரா மூலம் குடிக்க வேண்டும்!)

🥃 பிராந்தி (Brandy): pH 3.5 - 4.2 (ஆல்கஹால் மற்றும் நொதித்தல் செயல்முறையால் அமிலத்தன்மை கொண்டது)

🍺 பீர் (Beer): pH 4.0 - 4.5 (கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஆர்கானிக் அமிலங்கள் நிறைந்தது)
🥤 பெப்சி / கோக்: pH 2.4 - 2.6 (பாஸ்போரிக் அமிலம் உள்ளதால் பற்களின் எனாமலை மிக வேகமாக அரிக்கும்!)
🧪 10 மில்லி ACV + 200 மில்லி தண்ணீர்: pH 3.0 - 3.5 (தண்ணீர் கலந்தாலும் அமிலம் பலவீனமாக இருப்பதால் பற்களை அரிக்கும் தன்மை மாறாது!)

🍋 பழச்சாறுகள் (Acidic Fruits):
🍇 திராட்சை சாறு: pH 2.90 - 3.82
🍎 ஆப்பிள் ஜூஸ்: pH 3.35 - 4.00
🍊 சாத்துக்குடி சாறு: pH 3.50 - 4.00
🔴 மாதுளை சாறு: pH 2.93 - 3.20
☕ அன்றாட பானங்கள்:
🍲 மிளகு ரசம்: pH 3.80 - 4.50 (தக்காளி, புளி காரணமாக அமிலம், ஆனால் செரிமானத்திற்கு மிக நல்லது!)
🥛 பசுமோர்: pH 4.40 - 4.80 (லாக்டிக் அமிலம் நிறைந்தது)
☕ காபி: pH 4.80 - 5.50
🍵 தேநீர் (Black Tea): pH 4.90 - 5.50

🌿 மூலிகை & காய்கறிச் சாறுகள் (உடலுக்குள் காரத்தன்மையாக மாறுபவை):

🌵 சோத்துக் கற்றாழைச் சாறு: pH 4.00 - 5.00 (வயிற்றுப் புண்ணை ஆற்றும்)
🤍 வெள்ளை பூசணிச்சாறு: pH 4.40 - 5.15
🥒 வெள்ளரிக்காய்ச் சாறு: pH 5.10 - 5.80
🎃 மஞ்சள் பூசணிச்சாறு: pH 4.90 - 5.50
🍉 தர்ப்பூசணி சாறு: pH 5.18 - 5.60
🧪 சுரைக்காய்ச் சாறு: pH 5.40 - 6.20
🍃 துளசிச்சாறு: pH 5.50 - 6.50
🥬 கற்பூரவல்லிச்சாறு: pH 5.50 - 6.20
🥦 காய்கறி சூப் (வீட்டு முறை): pH 5.00 - 6.50

🥣 மாமிச சூப்:
pH 5.50 - 6.50 (லேசான அமிலத்தன்மை
உடலுக்குள் சென்ற பின்னும் அமிலத்தன்மையையே அதிகப்படுத்தும்)

🌱 முக்கிரட்டைச்சாறு: pH 6.00 - 6.80
💧 நடுநிலைக்கு அருகில் (Neutral / Alkaline Nature):
🌴 இளநீர்: pH 4.70 - 5.70 (இயற்கையான எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்தது)
தேங்காய் பால்:
5.90 -6.60.(அமிலத்தன்மை)
💦பதநீர்: 7 முதல் 7.40 வரை (காரத்தன்மை)
🥛 பசும்பால்: pH 6.50 - 6.70 (கிட்டத்தட்ட நடுநிலை)
பாக்கெட் பால் 6 முதல் 6.60 வரை (அமிலத்தன்மை)

🚰 சாதாரண நீர் / குழாய் நீர்: pH 6.50 - 8.50 (காரத்தன்மை,தாதுக்கள் நிறைந்தது)
🧪 சுத்திகриத்த நீர் (RO Water): pH 5.50 - 7.10 (தாதுக்கள் நீக்கப்படுவதால் லேசான அமிலம்)

💡 சுருக்கமான விஞ்ஞான விளக்கம்
(The Science Inside):
ஒரு பொருளின் pH அளவு 5.5 க்கும் குறைவாக இருந்தால், அது பற்களின் எனாமலை மென்மையாக்கும்.
ஆனால், ஒரு முக்கிய ரகசியம்: வெள்ளை பூசணி, சுரைக்காய், கற்றாழை,தேங்காய் பால் மற்றும் மிளகு ரசம் போன்ற இயற்கை பானங்கள் தயாராகும் போது லேசான அமிலத்தன்மை (pH < 7 க்கும் கீழ்) கொண்டிருந்தாலும், அவை நமது வயிற்றில் செரிமானமடைந்த பிறகு உடலை காரத்தன்மையாக (Alkaline) மாற்றுகின்றன! இதனால் தான் இவை அசிடிட்டி மற்றும் வயிற்றுப் புண்களைக் குணமாக்குகின்றன.
மாறாக, கூல்டிரிங்ஸ்,பசும்பால்,பாக்கெட் பால்,டீ,காப்பி, பிராந்தி, பீர் போன்றவை உடலுக்குள் சென்ற பிறகும் அமிலத்தன்மையையே (Acidic environment) அதிகப்படுத்துகின்றன.அதனால் தான் நோயுற்ற நேரத்தில் மூலிகைச்சாறு, காய்கறிச்சாறு, தேங்காய்பால்,
காய்கறி சூப் போன்றவை பரிந்துரைக்கப்படுகிறது.🌷

-ஏகப்பிரியன்
மு. இஸ்மாயில் DYT.
(யோகா,இயற்கை
வாழ்வியல் நிபுணர்)




ஆதி

02/09/2026

இரண்டு அடிக்கு மேல் வளர்ந்த
கீழாநெல்லி இலையை தேவையான
அளவு பறித்து (சிறிய செடியாக
இருந்தால் ஒரிரு செடியை வேருடன்
பிடுங்கி) அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டையை 200 மில்லி பசு மோரில் கலந்து காலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பு குடித்து வந்தால் பித்தப்பை கல் கரையும்.மஞ்சள்
காமாலை கட்டுப்படும்.கீழா
நெல்லிச் செடி கிடைக்காதவர்கள் மேசைக்கரண்டி கீழாநெல்லி பொடியை பசுமோரில் கலந்து குடிக்கலாம்.
(3 முதல் பத்துநாட்கள்.)

🧘‍♂️ 2. அடிவயிற்றுப் பகுதிக்கு அழுத்தம் கொடுத்து, பித்தப்பையைத் தூண்டும் 3 முக்கிய ஆசனங்கள்.

மண்டூகாசனம்:

வஜ்ராசனத்தில் அமர்ந்து, இரு கைகளையும் முஷ்டியாக (முஷ்டி முத்திரை) பிடித்து தொப்புளின் இருபுறமும் வைத்து, மூச்சை வெளிவிட்டு முன்னோக்கி வளைய வேண்டும். (5 சுற்றுகள்)இது வயிற்று உறுப்புகளை நன்கு மசாஜ் செய்கிறது.

புஜங்காசனம்: குப்புறப் படுத்து, கைகளை நெஞ்சுக்கு அருகில் வைத்து, உடலின் மேற்பகுதியை மட்டும் மேலே உயர்த்த வேண்டும். இது கல்லீரல் மற்றும் பித்தப்பைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
(10 விநாடி விதம் 5 முறை)

கபாலபதி பிராணாயாமம்:

நேராக அமர்ந்து, மூச்சை வேகமாக வெளிநோக்கி மட்டும் செலுத்தும் ஒரு சுவாசப் பயிற்சி.
(1 முதல் 2 நிமிடம்) இது அடிவயிற்றுப் தசைகளைத் தூண்டி, செரிமானத்தைச் சீராக்குகிறது.

🍎3. ஆப்பிள் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்:

ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் (Malic acid) கற்களை மென்மையாக்க உதவுகிறது. தினமும் ஒரு ஆப்பிள் ஜூஸில் (200 ml)ஒரு ஸ்பூன் (5 முதல் 10 ml) ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து இரவு தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு குடிக்கலாம்.
(1 முதல் மூன்று நாட்கள்)

நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள்:

முள்ளங்கி,சுரக்காய், புடலங்காய், பீட்ரூட் மற்றும் கீரை வகைகள். இவை பித்தப்பையில் கொழுப்பு படிவதைத் தடுப்பதோடு பித்தப்பை கற்கள் உருவாவதையும் தடுக்கும்.
எலுமிச்சை சாறு நெல்லிக்காய்ச்சாறு பித்தப்பை கற்கள் கரைய உதவும்.

🏃‍♂️ 4.நடைப்பயிற்சி (Brisk Walking): தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வேகமாக நடப்பது பித்தப்பை கற்களைக் கரைக்கவும், புதிய கற்கள் உருவாகாமல் தடுக்கவும் உதவும் சிறந்த பயிற்சியாகும்.
பித்தப்பைக் கற்கள் பெரும்பாலும் கொலஸ்ட்ராலால் உருவாவதால் வேக நடைப்பயிற்சி அதனைத் தடுக்கும்.

⏰ 5. உணவு நேரத்தைத் தவிர்ப்பதைத் தவிர்த்தல் (Never Skip Meals): நாம் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால், பித்தப்பையில் உள்ள பித்தநீர் அங்கேயே தேங்கி கெட்டியாகத் தொடங்கும். இதுவே நாளடைவில் கல்லாக மாறுகிறது.எனவே, காலை உணவைத் தவிர்க்காமல், குறிப்பிட்ட நேரத்திற்கு சீராக உணவு உட்கொள்வது பித்தப்பை தொடர்ந்து சுருங்கி விரிந்து, பித்தநீரை வெளியேற்ற உதவும். இத்துடன் தினமும் எதேனும் ஒரு வேளை சமைக்காத பழங்கள், காய்கறி கலவையை
மட்டுமே சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.!

-ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில் DYT.
(யோகா,இயற்கை
வாழ்வியல் நிபுணர்)

ஆதி






#பித்தப்பை_கல்

Address

Kanyakumari
1976

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aum herbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share