Drvkrajeevtvk

Drvkrajeevtvk திருவாடானை சட்டமன்ற உறுப்பினர்
சொல்வதற்காக அல்ல…
செய்வதற்காக வந்தவர்
மக்களுடன் • மக்களுக்காக

18/06/2026

ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் Dr. V.K. ராஜீவ், அரசுப் பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 20 பேரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிற நோயாளிகளின் உடல்நிலை மற்றும் நலன்கள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை வசதிகள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் இருப்பு மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சேவைகளின் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், பொதுமக்களுக்கு தரமான மற்றும் தடையற்ற மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

மேலும், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுடன் நேரில் கலந்துரையாடி, அவர்களின் தேவைகள் மற்றும் கருத்துகளையும் கேட்டறிந்தார்.

16.06.2026 - கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் Dr. V.K. ராஜீவ...
17/06/2026

16.06.2026 - கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் Dr. V.K. ராஜீவ் அவர்கள் கலந்துகொண்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பசுமை புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படவிருக்கும் காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை குறித்த முதுகலை பட்டயப் படிப்பினை துவக்கி வைத்து, அதற்கான பாடத்திட்டத்தினை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப., சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் (பொ) முனைவர் V. குமரேசன் மற்றும் ஆற்றல் கல்விகள் நிறுவன இயக்குநர் பேரா. G. குமரேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

16/06/2026

ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் ஊராட்சிக்குட்பட்ட தெற்குப்புதுக்குடியிருப்பு கிராமத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த பேருந்து வசதி இல்லாத பிரச்சினையை, மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. V. K. ராஜீவ் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கிராம மக்கள் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரை அன்புடன் வரவேற்று, தங்களது நீண்டநாள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு, தெற்குப்புதுக்குடியிருப்பு கிராமத்திற்கு விரைவில் பேருந்து வசதி ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

தொடர்ந்து, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஸ்டீல் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. சுற்று�

15/06/2026

தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, மேலும் தென்காசி மாவட்ட பொறுப்பு மாண்புமிகு அமைச்சரான வி.கே. ராஜீவ் அவர்கள், தமிழக–கேரள எல்லைப் பகுதியான செங்கோட்டை – புளியரை சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கனிம வளங்கள் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த ஆய்வு நடைபெற்றது.

ஆய்வின்போது கழிவுப் பொருட்கள் ஏற்றி வரப்பட்டதை அமைச்சர் நேரில் கண்டறிந்து, அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியதுடன், வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்ட நிலையில் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

கனிம வளக் கடத்தலைத் தடுக்க அரசு தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13/06/2026

இராமநாதபுரம் விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய ஊக்கம்!
மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
V. K. ராஜீவ் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் சேதுபதி விளையாட்டு மைதானத்தை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள உடற்பயிற்சி கூட வசதிகள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்தனர்.

விளையாட்டு வீரர்களுக்கு மேம்பட்ட வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், விளையாட்டு வளாகத்தை நவீனமயமாக்குவதற்கான திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, எதிர்கால மேம்பாட்டு பணிகளுக்கான நடவடிக்கைகளை திட்டமிட்டனர்.

தொடர்ந்து, அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு விளையாட்டு ஆர்வத்தை வெளிப்படுத்தினர். பின்னர் வேலுமாணிக்கம் ஹாக்கி மைதானத்திற்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

வீரர்களின் திறமைகளை பாராட்டிய அமைச்சர் அவர்கள், அவர்களுடன் இணைந்து ஹாக்கி விளையாடி உற்சாகப்படுத்தினார்.

11/06/2026

மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் அவர்கள் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றை கவனமாக கேட்டறிந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர்.

மேலும், அரசின் நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக பயனாளிகளுக்கு ஸ்கூட்டிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து, ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மக்களின் நலனையும் முன்னேற்றத்தையும் மையமாகக் கொண்டு இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

09/06/2026

மண்டபத்தில் கடல்சார் வளங்கள் மற்றும் மீன்வள மேம்பாட்டை முன்னிறுத்தும் முக்கிய ஆய்வுப் பயணம் நடைபெற்றது.

மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் அவர்கள் மற்றும் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் அவர்கள், கடல் மீன் வளர்ப்பு மையத்தை நேரில் பார்வையிட்டு கடல் பாசி வளர்ப்பு, மீன் வளர்ப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கடல்சார் வளங்களை பாதுகாத்து வளர்ச்சியடையச் செய்யவும் புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், அப்பகுதி மக்களின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தனர்.

உலகப் பெருங்கடல் தினம் – 2026 உலகின் உயிர்நாடியாக விளங்கும் பெருங்கடல்கள், எண்ணற்ற உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும், மனிதக...
08/06/2026

உலகப் பெருங்கடல் தினம் – 2026

உலகின் உயிர்நாடியாக விளங்கும் பெருங்கடல்கள், எண்ணற்ற உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும், மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான இயற்கை செல்வமாகவும் திகழ்கின்றன.

கடல் மாசுபாட்டைத் தடுத்து, கடல் வளங்களையும் உயிரினங்களையும் பாதுகாத்து, வருங்கால சந்ததியினருக்கு வளமான பூமியை வழங்க உறுதியேற்போம்.

"கடல் வளங்களையும் இயற்கை சமநிலையையும் பாதுகாப்போம்; வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்."

07/06/2026

மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் டாக்டர் V.K. ராஜீவ் அவர்கள், மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு வர்த்தகர்கள் சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வர்த்தகர்களின் பங்கு முக்கியமானது என்றும், அவர்கள் மாநிலத்தின் பெருமையை உயர்த்தி வருவதாகவும் தனது உரையில் குறிப்பிட்டார்.

மேலும், திருச்சியில் நடைபெற்ற ரோட்ராக்ட் கிளப் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டாக்டர் V.K. ராஜீவ் அவர்கள், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை பல்கலைக்கழகத்தின் த...
06/06/2026

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டாக்டர் V.K. ராஜீவ் அவர்கள், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை பல்கலைக்கழகத்தின் தாரமணி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, 15,000 மரக்கன்றுகள் நடும் பசுமை இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இந்த முயற்சி, பசுமைப் பரப்பை அதிகரித்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.

அதேநாளில் வெளியிடப்பட்ட நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு அறிக்கையில், தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாட்டின் எண்ணிக்கை 1,364 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் உயிரினப் பன்முகத்தன்மையை மேம்படுத்த மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது.

மரக்கன்றுகள் நடுதல், காடுகள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்தல், வனவிலங்குகளின் வாழ்விடங்களை பேணுதல் ஆகியவை சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கிய அம்சங்களாகும்.

பசுமையான மற்றும் நிலையான தமிழ்நாட்டை உருவாக்க அரசு மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்படுவது அவசியம்.

Address

Ramanathapuram
Ramanathapuram
623501

Website

Alerts

Be the first to know and let us send you an email when Drvkrajeevtvk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category