Man Panai Natural Therapy

Man Panai  Natural Therapy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Man Panai Natural Therapy, Massage service, Kovilpadagai, Avadi.

30/04/2017

*ice cold water - ஐஸ் வாட்டர் - சில் தண்ணீர்* குடிப்பதினால் நம் உடலில் உண்டாகும் பாதிப்புகள்!!!
👉 ஐஸ் வாட்டர் குடிப்பதினால் உங்கள் வயிற்றின் சீரண திறன் குறையும் (disturbs digestion)
👉 உங்கள் உடம்பின் சக்தி (body energy drops) குறையும்
👉சளி உருவாகும் (mucus), தொண்டை எரிச்சல் உண்டாகும்
👉இதய துடிப்பு குறையும்(slows heart rate)
👉உங்கள் உடம்பின் தண்ணீர் அளவு குறைய தொடங்கும்
(hinders hydration)
👉மலச்சிக்கல் (constipation) உண்டாகும்
👉தலைவலி (head ache) உருவாகும்
👉கொழுப்பு அதிகரிக்கும் (increases fat)
கோடை காலத்தில்..
இந்த முக்கிய பதிவை பகிருங்கள் !!!

24/03/2017

தினம் இரண்டு சப்போட்டா சாப்பிடுங்கள்!

தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் உச்சிமுதல் உள்ளங்கால் வரை பலன் கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

100 கிராம் சப்போட்டாவில்அடங்கியுள்ள சத்துக்கள்

புரதம்1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ச் சத்து2.6 கிராம், மாவுப்பொருள் 21.4 கிராம், கால்சியம் 2.1 மில்லிகிராம், பாஸ்பரஸ் 27.0 மில்லி கிராம், இரும்புச்சத்து 2.0 மில்லி கிராம், கரோட்டின் 97 மைக்ரோகிராம், ரிபோஃபிளோவின் 0.03 மில்லி கிராம், நியாசின்0.02 மில்லி கிராம் மற்றும் விட்டமின் சி 6.1 மில்லிகிராம் உள்ளது.

Amazing Benefits and Uses Of Sapota
மருத்துவ பயன்கள்

சப்போட்டாபழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி,கொழுப்பை நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல நோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது, எலும்புகள்வலுவடையும்

இரவில்உறக்கம் வராமல் கஷ்டப்படுபவர்களுக்கு அருமருந்து இந்த சப்போட்டா. இதை சாறாக்கி அருந்தலாம்.

பழக்கூழ், ஜாம், சிரெப், மில்க் ஷேக்,என்று விதவிதமாய் இதைத் தயாரித்துச் சாப்பிடலாம்.

இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்குஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு

உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைத்துவிடும் ஆற்றல் இதற்கு உண்டு.

The true words..
06/03/2017

The true words..

05/03/2017

🎋🌾🍂🍃🍁☘🍁🍃🍂🌾🎋

தகவல்: *பசுமைப்பாதை*

*பகுதி-2*

*மண்பாண்டங்களின் தொன்மையும், தன்மையும், நன்மையும்...*

*உலோகம் கண்டுபிடிப்பிற்கு முன்பே நாம் மண்ணால் செய்த பாண்டங்களை பயன்படுத்தி வருகிறோம்.*பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் களிமண்ணால் உருவான மண்பாண்டங்கள் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதற்கு புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த பலவகையான சாட்சியங்கள் உள்ளது. அக்காலத்தில் *வீடுகள்கூட களிமண்ணால் கட்டப்பட்டு அதில் வாழ்ந்தும் உள்ளனர்.*

களிமண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகள் தனி சுவைதரும். மேலும் அவ்வாறு செய்யப்பட்ட உணவுகளில் மருத்துவகுணம் நிறைந்து இருக்கும். மண்பாண்டங்கள் மூலம் சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும்போது *இரத்த அழுத்தம், நீரிழிவு வியாதி* போன்ற நோய்கள் கட்டுப்படுத்தப்படுகி­றது என்றும் மருத்துவர்கள் சான்றளித்துள்ளனர். மண்பானைகளில் சேமித்து வைத்து உபயோகிக்கும் தண்ணீர் சுவையாகவும், குளிர்ந்தும் இயற்கை மாறாமலும் இருக்கும். இதனால்தான் *மண்பானைகளை ஏழைகளின் குளிர்சாதனப்பெட்டி* என்று சொல்கிறோம்.

*தோண்டி, குடம், தோசைக்கல், இட்லிப்பானை, குளிர் சாதனப்பெட்டி, சித்திரப்பானை, காய்கறிப்பானை, மண்சட்டி, கலையம், விளக்கு, முகூர்த்தப் பானை, பூத்தொட்டி, அடுப்பு, அகல் மற்றும் பறவைகள்கூண்டு* என்று பலவகையான பொருட்களும் இந்த களிமண்ணால் உருவாக்கப்படுகிறது .

அக்காலத்தில் வீட்டில் அரிசி தானியங்களை சேமிப்பதற்கு மிகப்பெரிய அளவில் *மண்தொட்டிகள் (குதிர்)* உருவாக்கப்பட்டு அதில்தானியங்களை சேகரித்து வந்தனர். *வறட்சிக்காலங்களில் குதிர் மிகப்பெரிய பயனுடையதாக இருந்தது.*

வீட்டை அலங்கரிக்க *மண்ணால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள்* மற்றும் தெய்வ சிலைகளான அம்மன் காளி, அய்யனார் போன்ற சிலைகளும் செய்யப்படுகிறது. தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தவும் *மண் சிலை, குதிரை, கால் பாதம்* வடித்து குலதெய்வத்தை வழிபடுவது கிராமப்புற மக்களிடம் வழக்கமாக உள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் குணமடைய வேண்டிக்கொண்டு *நோய் குணமடைந்தவுடன் பாதிக்கப்பட்ட உடல் உறுப்பினைப் போன்று மண்ணால் செய்து,* அதனை தெய்வத்திற்குக் காணிக்கை ஆக்குகின்றனர்.

*தாழி (பிணப் பானை) மண்ணால் செய்யப்பட்ட ஒருவகை பானைவடிவம்.* இதில் ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லது எலும்புகளை அவர் பயன்படுத்திய பொருட்களுடன் வைத்துப் புதைத்து விடுவது வழக்கம். *இவ்வாறு புதைக்கப்பட்டத் தாழிகள்* தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளன.அதுமட்டுமல்லாது *இசை வாத்தியங்களான கடம் , மத்தளம்* போன்றவைகளும் தயாரிக்கப்படுகிறது .

*இவ்வளவு சிறப்புகள் உள்ள இந்த மண்பாண்டங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?*

தொடரும்

🎋🌾🍂🍃🍁☘🍁🍃🍂🌾🎋

05/03/2017

🎋🌾🍂🍃🍁☘🍁🍃🍂🌾🎋

தகவல்: *பசுமைப்பாதை*

*பகுதி-1*

*மண் பாத்திரங்களில் உணவு சமையல் செய்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.*

கோடைகாலத்தில் நாம் எதிர்கொள்ளும் உடல் உஷ்ணம், கண் எரிச்சல் பிரச்சனைகளை தீர்க்கும் மண் பாண்டங்கள்... பல்வேறு நன்மைகளை தரக்கூடியது.

நீரை சேமிக்க, சமையல் செய்ய மண் பாத்திரங்கள் பயன்படுகிறது. இன்றைய அவசர உலகத்தில் பலவகை உணவுகளை எடுத்துக்கொள்வதால் அமிலத்தன்மை ஏற்படுகிறது. மண் பாத்திரங்கள் சமையல் அமிலத்தன்மையை போக்குகிறது.

மண் பாத்திரங்கள் வாங்கினால், அதை 7 நாட்கள் நீரில் ஊறவைத்த பின் பயன்படுத்த வேண்டும். இதனால் மண்துகள்கள் இல்லாமல் போகும். உணவில் மண் கலக்காமல் இருக்கும்.

*கோடைகாலத்தில் அதிக உஷ்ணத்தால் கண் எரிச்சல், கண் சிவந்து போகுதல் போன்றவை ஏற்படும். மண் பாத்திரத்தை பயன்படுத்தி இப்பிரச்னைகளை போக்கும் முறைகளை காண்போம்.*

மண் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். வில்வ இலைகளை சுத்தப்படுத்தி மண்பாத்திரத்தில் சுமார் 4 மணி நேரம் வரை ஊறவைக்கவும். பின்னர், வில்வ இலைகளை எடுத்துவிட்டு தண்ணீரில் கண்களை கழுவினால் கண் எரிச்சல் சரியாகும். கண்கள் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை மாறும்.கோடைகாலத்தில் கண் எரிச்சல் என்பது தவிர்க்க முடியாதது. காற்றினால் பரவும் கிருமிகள் கண்களை பாதிக்கும். இப்பிரச்னைக்கு வில்வ இலை மருந்தாகிறது.

*வெட்டிவேரை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் நீர் செய்முறை குறித்து பார்க்கலாம்.*
வெட்டி வேரை நன்றாக சுத்தப்படுத்தி எடுக்கவும். வெட்டிவேரை மண்பானை தண்ணீரில் போட்டு ஊறவைக்கவும். இந்த தண்ணீரை குடித்துவர வயிற்றுவலி சரியாகும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், சிறுநீரோடு ரத்தம் கலந்து வருவது குணமாகும். சிறுநீர் பாதைக்கு குளிர்ச்சி தரும். உடல் உஷ்ணம் குறையும்.

*தாமரை இதழை பயன்படுத்தி உடல் சோர்வை போக்கும் முறை குறித்து பார்க்கலாம்.*

மண்பானையில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். இதில் தாமரை இதழ்களை போட்டு இரவு முழுவதும் வைத்து தண்ணீரை குடித்துவர உடல் சோர்வு நீங்கும். அற்புதமான மருந்தாக விளங்கும் தாமரை இதழ் இதயத்தை பலப்படுத்தும். உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

*உடலுக்கு குளிர்ச்சி தரும் நீர் ஆகாரம் செய்யும்முறை குறித்து பார்க்கலாம்.*

ஊறவைத்த பழைய சாதத்தை மண்பாத்திரத்தில் எடுக்கவும். இதனுடன் நாட்டு பசுவின் தயிர் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, நறுக்கிய பச்சை வெங்காயம், சிறிது பச்சை மிளகாய் சேர்த்து நீர்விட்டு நன்றாக கரைக்கவும். கோடைகாலத்தில் இதை சாப்பிட்டுவர நீர் இழப்பு சமன்படுகிறது. புத்துணர்வு ஏற்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. அல்சர் இருப்பவர்கள் மண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவது நல்லது. மண் பாத்திரத்தில் சமைப்பதால் பஞ்சபூதங்களின் ஆற்றல் அவ்வுணவில் சேரும்.

தொடரும்

தகவல்: *பசுமைப்பாதை*
98430 85615, 98430 85616.

*2017 மார்ச் 4,5 (சனி,ஞாயிறு) தேதிகளில்* கோயம்புத்தூா் தடாகம் சாலையில் கணுவாய் அருகே குமரகத்தில் நடைபெறவுள்ள *பசுமைப்பாதையின் இயற்கை வாழ்வியல்* நிகழ்ச்சிகளில் *பண்டைய கால மண்பாண்டங்கள் முதல் நவீன மண்பாண்டங்கள் வரை* அனைத்து வகைகளும் உங்களது வரவுக்காக காத்திருக்கும். நன்றி!

🎋🌾🍂🍃🍁☘🍁🍃🍂🌾🎋

Address

Kovilpadagai
Avadi
600062

Telephone

8124295514

Website

Alerts

Be the first to know and let us send you an email when Man Panai Natural Therapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share