13/05/2026
கரூர், மே 10:
கரூரில் “கரூர் காஸ்ட்ரோகான் 2026” எனும் முதல் குடலியல் மற்றும் காஸ்ட்ரோ மருத்துவ மாநாடு இன்று சிறப்பாக நடைபெற்றது. கரூர் கட் கிளப் சார்பில், இந்திய குடலியல் சங்கம் – தமிழ்நாடு பிரிவுடன் இணைந்து, கரூர் கேஆர்வி மெரிடியன் ஹோட்டலில் இந்த மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னணி குடலியல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று, குடலியல் நோய்கள், கணைய அழற்சி, லாப்ரோஸ்கோபிக் சிகிச்சைகள், கல்லீரல் நோய்கள், ERCP மற்றும் மேம்பட்ட எண்டோஸ்கோபி சிகிச்சைகள் குறித்து அறிவியல் உரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடத்தினர்.
மேலும், மருத்துவ துறையில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களுக்கான அறிவியல் பரிமாற்றம் நடைபெற்றது. இந்த மாநாடு கரூர் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு மேம்பட்ட குடலியல் சிகிச்சை சேவைகளை கொண்டு செல்லும் முயற்சியாக அமைந்தது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கரூர் கட் கிளப் தலைவர் டாக்டர் எஸ். சதாசிவம், துணை தலைவர் டாக்டர் சங்கர்,செயலாளர் டாக்டர் கே.ஜி. ராஜ் நிஹேதன், பொருளாளர் டாக்டர் ஜி. மணிகண்டன், உறுப்பினர் டாக்டர் லக்ஷ்மணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.