24/08/2026
🟢⚪🟢 2079-வது நாளின் காலைத்தியானம் 25/08/2026 !!!
இந்த காலைவேளையில், “அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்" .…. "HE WILL HELP YOU”என்று (PSALM) சங்கீதம் 37:5-ல் காணப்படும் வேதப்பகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.
நம்பிக்கையற்ற இவ்வுலகில், நமது காரியங்கள் வாய்க்கவேண்டும் என்று பலவிதமான முயற்சிகளை எடுத்தும், அநேக வேளைகளில் தோல்வியையே சந்திக்கிறோம்.
இந்தநாள் தியான வசனத்தின் முன்பகுதியில் நமது வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து அவர்மேல் நம்பிக்கையாயிருக்க வேண்டும் என்றும், அப்பொழுது, கர்த்தர் நிச்சயமாகவே காரியங்களை வாய்க்கப்பண்ணுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாம் கடந்து செல்லும் பாதையில், கர்த்தரை விட்டு விலகிப்போகும் வழி ஏதாவது உண்டோ என்று ஆராய்ந்து பார்த்து, நம்மை சீர்ப்படுத்தி, கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்யும்போது, கர்த்தர் அழகாய் வழிநடத்துகிறார்.
உசியா தனது பதினாறு வயதில் யூதாவின் மேல் ராஜாவாகி, “கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து.… தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச்செய்தார்” என்று
2 நாளாகமம் 26:5-ல் பார்க்கிறோம்.
நமது வேலை, தொழில், குடும்பத்தில் திருமண காரியம் மற்றும் ஊழியம் என அனைத்தையும் கர்த்தர் கரத்தில் அர்ப்பணித்து, நம்பிக்கையோடு காத்திருக்கும்போது, அவர் காரியங்களை வாய்க்கப்பண்ணுகிறார்.
எனவே பிரியமானவர்களே, கர்த்தர்மீது முற்றிலும் நம்பிக்கையாயிருப்போம். அதினதின் காலத்தில் சகல காரியங்களையும் கர்த்தர் நேர்த்தியாய் செய்து, நம்மை மகிழப் பண்ணுவார்.
ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, நாங்கள் உம்மீது நம்பிக்கை வைக்கும்போது, கர்த்தராகிய நீர் எங்கள் காரியங்கள் யாவையும் வாய்க்கப்பண்ணும்படி ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப்பிதாவே…ஆமென்
ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200
Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India