ArasuLabs

ArasuLabs We are a full-service clinical and anatomical pathology laboratory serving the Pattukkottai city and

06/03/2026
20/01/2026

காப்புரிமை முடியும் ஜிஎல்பி-1 மருந்து பலன்கள் மக்களுககா?

இந்த ஆண்டு முதல் ஜிஎல்பி-1 எனும் மருந்தின் காப்புரிமை முடிவடைகிறது அதன் பிறகு, இந்த மாத்திரை அல்லது ஊசி மிக மலிவான விலையில் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎல்பி-1 என்பது நமது குடலால் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் ஒரு ஹார்மோன் ஆகும். நாம் உணவு உண்ணும்போது, இது இரத்தத்தில் கலந்து மூளைக்கும் கணையத்திற்கும் சில முக்கியமான சமிக்ஞைகளை அனுப்புகிறது. இது மூளைக்கு பசி இல்லை என்ற சிக்னலை அனுப்பி, நமக்கு வயிறு நிறைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மேலும், உணவு வயிற்றில் இருந்து காலியாகும் நேரத்தை இது நீட்டிக்கிறது. இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

1980களில் நீரிழிவு நோய்க்கான மருந்தாக அறிமுகமாகி, பின்னர் உடல் எடையைக் குறைக்கும் ஊசியாகப் பிரபலமடைந்தது. 2026ல் இதன் காப்புரிமை முடிவடைவதால், உலகெங்கும் மிக மலிவான விலையில் இது கிடைக்க வாய்ப்புள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் 2026 முதல் இந்த மருந்துகள் அரசு மருத்துவக் காப்பீட்டின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. இதனால் பல கோடி மக்கள் இதனைப் பயன்படுத்தும் சூழல் உருவாகும்.

ஊசி மூலம் உடல் எடையைக் குறைப்பதில் சில பின்விளைவுகளும் உண்டு. உதாரணமாக, பித்தப்பையில் கற்கள் உருவாகலாம். மேலும், மருந்தை நிறுத்தினால் மீண்டும் உடல் எடை அதிகரிக்கக்கூடும். இது தூக்க மாத்திரையைப் போன்றது; பயன்படுத்தும் வரை பலன் தரும், நிறுத்தினால் பழைய நிலைக்கே திரும்ப வாய்ப்புள்ளது. இருப்பினும், உடல் பருமனினால் ஏற்படும் மற்ற தீவிர நோய்களுடன் ஒப்பிடும்போது, இந்த மருந்தின் பக்கவிளைவுகள் குறைவுதான் என்று மருந்து நிறுவனங்கள் கூறுகின்றன.

இந்த மருந்துகளின் பயன்பாட்டால் விமான நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும் என இன்று வெளியான ஒரு வணிக அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் சராசரி உடல் எடை குறைந்தால், விமானத்தின் மொத்த எடை குறையும். ஒரு பயணிகளின் சராசரி எடை 5 கிலோ குறைந்தால் கூட, விமான நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் எரிபொருள் செலவு மிச்சமாகும். மக்கள் மெலிதாகும் போது, விமான இருக்கைகளின் வடிவமைப்பு மற்றும் இடவசதிகளில் மாற்றங்கள் செய்யப்படலாம். மேலும், இம்மருந்துகளை உட்கொள்பவர்கள் மிகக் குறைந்த அளவே உணவை உண்பார்கள் என்பதால், விமானங்களில் வழங்கப்படும்
ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் எரிபொருள் செலவு மிச்சமாகும். மக்கள் மெலிதாகும் போது, விமான இருக்கைகளின் வடிவமைப்பு மற்றும் இடவசதிகளில் மாற்றங்கள் செய்யப்படலாம். மேலும், இம்மருந்துகளை உட்கொள்பவர்கள் மிகக் குறைந்த அளவே உணவை உண்பார்கள் என்பதால், விமானங்களில் வழங்கப்படும் உணவுகளின் தேவையும் குறையலாம். இதனால் விமான நிறுவனங்களின் ஒரு பங்கு ஈட்டம் (EPS) சுமார் 4% வரை கூடும் என அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மனுசன் வாயை கட்டாமல், மருந்து மூலம் உடல்எடையை குறைப்பது எல்லாம் வருத்தமளிக்கும் விசயம் தான்.

ஆனால் நடக்கும் இவ்வித மாற்றங்களை யாரால் தடுக்கமுடியும் 🥲?

20/12/2025

ரஷ்யாவின் வடமுனையில் வசிக்கும் ஒரு ரஷ்யரை எடுத்துக்கொள்வோம். உலகின் தென்பகுதி நியூசிலாந்து, ஆனால் அவர்கள் ஐரோப்பிய வம்சாவழியினர் என்பதால் அங்கே வசிக்கும் ஒரு பூர்வகுடி மாவோரி இனத்தவரை எடுத்துக்கொள்வோம். இந்த இருவரின் டி.என்.ஏவையும் பரிசோதனைக்கு எடுப்போம். இப்போது ஆப்பிரிக்காவில் இருக்கும் நமிபியா நாட்டுக்குச் செல்வோம். அங்கே பக்கத்து பக்கத்து கிராமங்களில் வாழும் இருவரின் டி.என்.ஏவை சோதனைக்கு எடுப்போம்.

இந்த இரு சாம்பிள்களில் எந்த ஜோடியின் டி.என்.ஏவில் அதிகபட்ச வித்தியாசம் காணப்படும்? வெள்ளை நிற ரஷ்யர் மற்றும் பிரவுன் நிற மாவோரி ஆகிய இருவரின் மரபணுக்களுக்கு இடையேதான் அதிக வேறுபாடு காணப்படும் என நாம் நினைத்தால் அது அறிவியல் ரீதியாகத் தவறானது. உண்மையில் அந்த இரு நமிபியர்களுக்கு இடையேதான் டி.என்.ஏ வித்தியாசம் மிக அதிகமாக இருக்கும்.

ஆப்பிரிக்காவைத் தவிர உலகின் எந்த நாட்டில் வாழும் எல்லா மக்களின் டி.என்.ஏவும் ஒன்றுக்கு ஒன்று மிகவும் நெருக்கமானதே. ஆனால் அருகருகே வாழும் ஆப்பிரிக்க கிராம மக்களின் டி.என்.ஏ மிகப்பெரிய வேறுபாட்டைக் காட்டும். இதற்கு அறிவியல் ரீதியான காரணம் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு முக்கியமான இடப்பெயர்வு ஆகும்.

சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 2000 முதல் 7000 பேர் மட்டுமே ஆப்பிரிக்காவைக் கடந்து அரேபியா மூலம் உலகின் இதர பகுதிகளில் குடியேறினார்கள். அன்றைய ஆப்பிரிக்க மக்கள் தொகை சுமார் 1 லட்சம் வரை இருந்திருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்த 95,000 பேரின் மரபணுக்கள் ஆப்பிரிக்கா எங்கும் பரவி கிளைத்தன. ஆனால் இதர உலக மக்கள் அனைவரும் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிய அந்த 2000 பேரின் வம்சாவளியினர் மட்டுமே. நம் அனைவரிடமும் அந்த ஒரு சிறு குழுவின் மரபணுக்கள் தான் உள்ளன.

அதாவது ஆப்பிரிக்காவிற்கு வெளியே இருக்கும் சுமார் 800 கோடி மக்களின் மூதாதையர் வெறும் 2000 பேர் மட்டுமே. ஆனால் ஆப்பிரிக்காவில் தங்கியிருந்த 95,000 பேரின் வம்சாவளியினரிடம் அந்த மூல மரபணுக்களின் முழுமையான வேறுபாடுகள் அப்படியே தங்கிவிட்டன. இதனை மரபியலில் பவுண்டர் எஃபெக்ட் என்று அழைப்பார்கள். இதனால்தான் உலகைச் சுற்றி வந்த இருவருக்கும் இல்லாத மரபணு வித்தியாசம் ஆப்பிரிக்காவின் இரு கிராமத்து மனிதர்களுக்கு இடையே காணப்படுகிறது.

ஆப்பிரிக்காவில் வாழும் மக்கள் அதிகப்படியான மரபணு மாறுபாடுகளைக் கொண்டிருப்பதால், உலகின் மற்ற பகுதிகளில் காணப்படாத பல்வேறு நோயெதிர்ப்புத் திறன்கள்அவர்களிடம் அதிக மாக உள்ளன. நவீன மருத்துவத் துறையில் இது மிக முக்கியமானது; ஏனெனில் ஆப்பிரிக்க மரபணுக்களை ஆய்வு செய்வதன் மூலமே மனித இனம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய துல்லியமான மருந்துகளையும் சிகிச்சைகளையும் கண்டறிய முடியும்.

மேலும், இந்தத் தரவுகள் 'இனம்' என்பது ஒரு சமூகக் கட்டமைப்பே தவிர உயிரியல் ரீதியானது (race is not biological) அல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றன.

05/12/2025

*ஃபேட்டி லிவர்*

ஒரு நபர் முதலில் மது அருந்திவிட்டு, பின்னர் பீட்சா சாப்பிடுகிறார். அதன்பின் நான்கு மணிநேரம் அவரது இரத்த சர்க்கரை அளவுகள் ஏறாமலேயே இருக்கின்றன.

இதனால், மது அருந்திவிட்டு Corbohytrate எடுத்தால், இரத்த சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

உடல் வெவ்வேறு எரிபொருட்களை எவ்வாறு கையாள்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், இது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் இல்லை.

பீட்சாவில் குளுக்கோஸ் உள்ளது. மதுவில் எத்தனால் உள்ளது. இவை இரண்டும் முற்றிலும் மாறுபட்ட வளர்சிதை மாற்றப் (Metabolic) பாதைகளைப் பின்பற்றுகின்றன.

மது (எத்தனால்) விரைவாக உறிஞ்சப்படுகிறது, ஆனால் அதை உங்கள் செல்களால் நேரடியாகப் பயன்படுத்த முடியாது. உடலானது எத்தனாலை ஒரு நச்சுப் பொருளாகவே (Toxin) கருதுகிறது, முதலில் நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்பட வேண்டும். எனவே, நீங்கள் மது அருந்தும்போது, கல்லீரல் மற்ற எல்லா பணிகளையும் கிட்டத்தட்ட நிறுத்திவிட்டு, முதலில் மதுவை வெளியேற்றுவதில் கவனம் செலுத்துகிறது.

குளுக்கோஸை வெளியேற்றுவது உட்பட மற்ற அனைத்து வளர்சிதை மாற்றப் பணிகளும் தற்காலிகமாக தாமதப்படுத்தப்படுகின்றன.

இதன் காரணமாக, குளுக்கோஸ் ஆரம்பத்தில் பெரிய அளவில் உயர்வதில்லை. இது வெற்றியாகத் தோன்றுகிறது, ஆனால் இது உண்மை அல்ல. இரத்த சர்க்கரை கட்டுப்படுத்தப்படுவது, உடல் திறமையாகச் செயல்படுவதால் அல்ல—மாறாக, கல்லீரல் அதிக வேலையால் திணறிப்போய் குளுக்கோஸைக் கையாள்வதைத் தள்ளி வைத்ததால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் உண்மையான சிக்கல் - கல்லீரல் எத்தனாலைச் வெளியேற்றுவதில் மும்முரமாக இருக்கும்போது, அதனால் கொழுப்பைச் சரியாக வளர்சிதை மாற்றம் செய்ய முடியாது.

பீட்சாவில் இருக்கும் கொழுப்பு எரிக்கப்படுவதற்குப் பதிலாக, கல்லீரலிலேயே சேமிப்பு ஆகிறது. இதுதான் ஃபேட்டி லிவர் வியாதி உண்டாக மூலகாரணம்

சர்க்கரைவியாதிக்கு பதிலாக ஃபேட்டி லிவர் வியாதி பெற்றுக்கொள்வது புத்திசாலித்தனம் அல்லவே?

கர்நாடக கோலர் தங்கவயல் பெண்ணிற்கு உலகில் யாருக்கும் இல்லாத புதிய வகையான Blood Group அறிவிக்கப்பட்டுள்ளது.
31/07/2025

கர்நாடக கோலர் தங்கவயல் பெண்ணிற்கு உலகில் யாருக்கும் இல்லாத புதிய வகையான Blood Group அறிவிக்கப்பட்டுள்ளது.

23/07/2025

நடந்தால் கொழுப்பை குறைக்க முடியுமா?

நிறைய பேர்கள், நான் நடந்தே 1 கிலோ குறைத்தேன், 2 கிலோ குறைத்தேன் என்று நிறைய பதிவுகள் போட்டிருக்கிறார்களே?

அவர்கள் நடந்தே 10 கிலோ குறைத்தேன், 20 கிலோ குறைத்தேன் என்று போட்டிருக்கிறார்களா?

சந்தேகம்தான். அப்படி நடப்பதற்கு வாய்ப்பு குறைவு. அப்படியே நடந்திருந்தால், அது மிகுந்த மனக்கட்டுப்பாடுடன், பட்டினி கிடந்து, தசைகள் அழிந்து, ஒமகுச்சி நரசிம்மன் மாதிரி எழும்பும் தோலுமாக, தலை முடியெல்லாம் கொட்டி, ஆரோக்கியம் குன்றிய மனிதராகத்தான் மாறி இருக்கவேண்டும். 😀

நடந்தே 1 கிலோ குறைத்தேன், 2 கிலோ குறைத்தேன் என்பதெல்லாம், உடலில் உள்ள தண்ணீர் இழப்புதான்.
இதைப்பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

நாம் சாப்பிடும் கார்போஹைட்ரேட் உணவுகள் குளுக்கோஸாக மாறும், அதன் பின் அதை இன்சுலின், கிளைக்கோஜனாக மாற்றி சேமிக்கும். நம் உடலில் உள்ளே சேமித்து வைத்திருக்கும் கிளைக்கோஜன், தோராயமாக இரண்டு நாள் வரை நமக்கு குளுக்கோசை கொடுக்கும். கிளைக்கோஜன் சேமிப்பு காலியாகிவிட்டால், நம் மெட்டபாலிசம் வேறு முறையில் சக்தி கிடைக்க மாறிக்கொள்ளும்.

நம்முடைய கல்லீரலில் தோராயமாக 70கிராமில் இருந்து 100 கிராம் வரை கிளைக்கோஜன் சேமிக்கப்பட்டிருக்கும்.

நம்முடைய தசைகளில் தோராயமாக 400 கிராம் வரை கிளைக்கோஜன் சேமிக்கப்பட்டிருக்கும்.

இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால், நம் உடலில் தோராயமாக 500 கிராம் வரை கிளைக்கோஜன் சேமிக்கப்பட்டிருக்கும்

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நம் உடல் ஒவ்வொரு கிராம் கிளைக்கோஜனுடன் சேர்த்து 3 கிராம் தண்ணீரையும் சேர்த்து சேமிக்கும்.

எனவே 500 கிராம் கிளைக்கோஜன் X 3 கிராம் தண்ணீர் = 1500 கிராம் தண்ணீர் சேமிக்கப்பட்டிருக்கும்

ஆக மொத்தம் 500 கிராம் கிளைக்கோஜன் + 1500 கிராம் தண்ணீர் = 2000 கிராம்

2000 கிராம் என்பது = 2 கிலோ.

எல்லாவற்றையும் சேர்த்தால், நம்முடைய கிளைக்கோஜன் சேமிப்பு கிடங்கு நிறம்பி இருந்தால் 2 கிலோ எடை நம் உடலில் சேர்ந்து இருக்கும்.

நீங்கள் இப்போது ஒரு ஒரு வாரம் தீவிர நடைபயிற்சி செய்தால் இந்த கிளைக்கோஜன் சேமிப்பு கிடங்கு காலியாகும். உங்களுக்கும் ஒரு 1.5 கிலோவிலிருந்து 2 கிலோ வரை எடை குறையும்.

இந்த எடைக்குறைப்பு, 500 கிராம் கிளைக்கோஜன், அதனுடன் சேர்ந்து 1500 கிராம் தண்ணீர், கிளைக்கோஜன் சேமிப்பு கிடங்கில் சேர்ந்துவிடும்.

உடலில் 2 கிலோ ஏறிவிடும்.

ஆகா ஒரு நாள்தானே சீட்டிங், 2 கிலோ ஏறிவிட்டதே என்று அதிர்ச்சி பதிவு போடுவீர்கள்.

சரி மீண்டும் ஒரு வாரம் தொடர்ந்து நடந்தால் என்னவாகும்?

எடை மீண்டும் குறையுமா?

குறையாது. ஏன்?

உடற்பயிற்சியால் எடையை குறைப்பது என்பது பகிரதபிரயத்தனம்தான்.

அதுவும் நடைபயிற்சி போன்ற ஏரோபிக் (Aerobic) உடற்பயிற்சிகள் கிளைக்கோஜன் சேமிப்பைதான் காலிபண்ணுகிறது.

உடற்பயிற்சியால் பயன்பெறுவது, வலிமைபெறுவது தசைகள்தான்.
N
உணவு முறை மாற்றமில்லாமல், உடல் எடையை குறைக்க முடியாது. 😄

கீட்டோசிஸ்க்கும் (உணவுமுறை),    கீட்டோஅசிடோஸிஸ்(DKA – DIABETIC KETOACIDOSIS)க்கும் என்ன வித்தியாசம்? இரண்டிலும் கீட்டோ...
09/07/2025

கீட்டோசிஸ்க்கும் (உணவுமுறை), கீட்டோஅசிடோஸிஸ்(DKA – DIABETIC KETOACIDOSIS)க்கும் என்ன வித்தியாசம்?

இரண்டிலும் கீட்டோன்தானே உருவாகிறது?

பின் எப்படி, கீட்டோசிஸ் என்றால் பிரச்சனை இல்லை,
கீட்டோஅசிடோஸிஸ் என்றால் பிரச்சனை.

இதற்கு கீட்டோசிஸ், கீட்டோஅசிடோஸிஸ் எப்படி ஏற்படுகிறது என்பதை பார்த்துவிடலாம்.

கீட்டோசிஸ்
---------------------
நாம் கார்போஹைட்ரேட் உணவுகளை, குறைத்துவிடுகிறோம், உடலில் உள்ள கிளைக்கோஜன் சேமிப்பும் காலி ஆகிவிடும். நம் உடலில் குளுக்கோஸ் அளவுகள் குறைந்துவிடும். அதனால் இன்சுலின் அளவுகளும் குறைந்துவிடும்.

நம் உடல் இப்போது சக்திக்காக, வேறு முறையை தேட துவங்கும்,

நாம் சாப்பிடும் கொழுப்பு உணவுகளிலிருந்தும், நம் உடலில் சேமிக்கபட்டிருக்கும் கொழுப்பிலிருந்தும், கொழுப்பு அமிலங்கள் விடுபட்டு இரத்தத்தில் கலந்து கல்லீரலுக்கு போகும். அங்கே அது கீட்டோனாக மாற்றப்படும்.

கீட்டோஅசிடோஸிஸ் ---------------------------------------
நம் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட்டுக்கொண்டு இருப்போம். குளுக்கோஸ் உற்பத்தி ஆகிகொண்டே இருக்கும். கிளைக்கோஜன் சேமிப்பும் நிறம்பி இருக்கும்.

இங்கே என்ன பிரச்சனை என்றால், குளுக்கோஸை செல்லுக்குள் அனுப்ப இன்சுலின் தேவை. நாம் டைப்-I நீரழிவு பிரச்சனை உள்ளவர்களாக இருந்தால், நமக்கு இன்சுலின் சுரப்பு மிக குறைவாக இருக்கும். அதை சரி செய்ய, நாம் சரியான அளவில் இன்சுலின் எடுக்கவேண்டும். அப்படி எடுக்கமால் விட்டுவிட்டால், குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடியாது. கையில் வெண்ணெய் வைத்து கொண்டு நெய்யிற்கு அலையும் கதை போல், குளுக்கோஸ் இருந்தாலும் அதை நம் சக்திக்காக உபயோகபடுத்தமுடியாது.

இப்போதும் நம் உடல், சக்திக்காக, வேறு முறையை தேட துவங்கும்.

இப்படி தொடர்ந்து சரியான இன்சுலின் அளவை எடுக்காமல் விட்டுவிட்டால், கொழுப்பு, தசை எல்லாவற்றையும் காலி பண்ணும். அதிக கீட்டோன்களை உண்டுபண்ணும். உடலில் குளுக்கோஸ் அளவுகளும் அதிகமாக இருக்கும்.

கீட்டோசிஸ்க்கும், கீட்டோஅசிடோஸிஸ்க்கும் உள்ள வித்தியாசம், கீட்டோன் அளவுகளால் மாறுபடுகிறது. மேலும் இரத்தத்தின் PH VALUE அளவு குறைந்து விடும்.

நாம் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறோம் என்றால், நம் இரத்தத்தில் கீட்டோன் 0.6 MMOL க்கு குறைவாக இருக்கும். இரத்தத்தின் PH VALUE அளவு சரியாக இருக்கும்.
நாம் நீரழிவு பிரச்சனையால் கீட்டோஅசிடோஸிஸ்க்கு சென்று விட்டோம் என்றால், கீட்டோன் 20.0 MMOL க்கு அதிகமாக இருக்கும். குளுக்கோஸ் அளவுகளும் அதிகமாக இருக்கும். இரத்தத்தின் PH VALUE அளவு குறைந்து விடும்.

நாம் கீட்டோசிஸ் போகவேண்டும் என்றால் முதலில் கொழுப்பிலிருந்து கொழுப்பு அமிலங்கள் விடுபடவேண்டும். அதற்கு லிப்போலைசிஸ் (LIPOLYSIS) என்று பெயர்.

02/06/2025
நாம் மது அருந்தும்பொழுது சிறிது அளவினை நம் வயிறு உறிஞ்சிக் கொள்ளும். (இனி ஆல்கஹால் அல்லது சாராயம் என்று சொல்வோம்) பெரும்...
06/01/2025

நாம் மது அருந்தும்பொழுது சிறிது அளவினை நம் வயிறு உறிஞ்சிக் கொள்ளும். (இனி ஆல்கஹால் அல்லது சாராயம் என்று சொல்வோம்) பெரும்பாலான அளவை சிறுகுடல் உறிஞ்சிக்கொள்ளும். அதனால்தான் உணவு உண்டபின்னர் மது அருந்தினால் போதை ஏற சற்று நேரமாகின்றது.

சாராயத்தின் செறிவினைப் பொறுத்து அது எத்தனை வேகத்தில் நம் உடல் உறிஞ்சிக்கொள்கின்றது என்பது மாறுபடும். உதாரணமாக பீரை விட விஸ்கி, பிராந்தி, வோட்கா போன்றவைகள் அதிவேகமாக உறிஞ்சிக்கொள்ளப்படும்.

உறிஞ்சப்பட்ட சாராயம் உடனடியாக நம் ரத்தத்தில் கலந்து உடலெங்கும் ஓடத் துவங்கும். அதே சமயத்தில் நம் உடலும் அதனை வெளியேற்ற சற்று பிரயத்தனப்பட்டு வேலை செய்யத் துவங்கும். சிறுநீரகம் தன் பங்கிற்கு ஓரளவைச் சிறுநீரில் கலந்து வெளியேற்றும். நுரையீரல் தன் பங்கிற்குச் சில அளவை மூச்சுக்காற்றில் வெளியேற்றும். (அதனால்தான் Breath Analyserல் கண்டு பிடிக்கின்றார்கள்)

கல்லீரல் தன் பங்கிற்கு பெரும்பாலான அளவை ஆல்கஹாலை உடைத்து அசிட்டிக் அமிலமாக மாற்றும். இத்தனை பேர் சேர்ந்து அந்த ஆல்கஹாலை வெளியேற்றப் போராடிக்கொண்டிருக்கையில் நாம் அதனை விட வேகமாக அதிக அளவில் மது அருந்தினால்... என்னாகும்?

அதனால்தான் அவைகள் விரைவில் தம் இயல்பில் குன்றி வலுவிழந்து செயலிழந்து போகின்றன. இதுவே ஒரு வகையில் மெதுவான தற்கொலை முயற்சி மாதிரிதான்.

சரி, இனி ஆல்கஹாலின் செயல்பாடு மூளையினை எப்படிப் பாதிக்கின்றது. இரத்தத்தில் கலந்து உடலில் பயணிக்கும் ஆல்கஹால் நம் மூளைக்கும் ஒரு பயணம் போகும்.

அதன் அளவை BAC என்பார்கள். அதாவது Blood Alcohol Concentration. இரத்தத்தில் ஆல்கஹாலின் செறிவு.

BAC 0.03ல் இருந்து 0.12 சதவீதம் இருக்கையில், தான் ஒரு பெரிய பலசாலி, தன்னால் எதுவும் முடியும் என்று ஒரு எண்ணம் வரும். உலகில் எது வந்தாலும் சமாளிக்கும் தைரியம் தன்னிடம் உள்ளது என்று தோன்றும். இந்நிலையில் சரியான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது. ஏனெனில், மனதில் முதலில் எது படுகின்றதோ அதுவே சரியானதாகத் தெரியும். அந்தச் சூழ்நிலையில் யாராவது எதாவது சொன்னாலும், அதற்கேற்றவாறே மனம் செயல்படத் தோன்றும்.

BAC 0.9ல் இருந்து 0.25 சதவீதம் இருக்கையில், தூக்கம் தூக்கமாக வரும். நினைவுகள் மழுங்கும். சற்று முன் நடந்த நிகழ்வுகள் கூட நினைவில் இருக்காது. வேகமாக இயங்க முடியாது. கையில் இருக்கும் மதுவைத் தடுமாறிக் கொட்டிவிட்டு அதனை வெறித்துப் அதனை வெறித்துப் பார்ப்பார்கள். உடல் ஒத்திசையாது. நிலை தடுமாறும். நடக்கையில் உடல் தள்ளாடும். கண் பார்வை மங்கும். கேட்கும் திறன், சுவை உணர்தல், தொடுதல் போன்ற உணர்வுகளில் தடுமாற்றம் அல்லது இல்லாமல் போய்விடும்.

BAC 0.18ல் இருந்து 0.30 சதவீதம் இருக்கையில், தான் என்ன செய்கின்றோம் என்று அவருக்கே தெரியாது. குழப்பமாக இருக்கும். ஒன்று அதீத பாசக்காரராக மாறி விடுவார் அல்லது அதீத கோபக்காரராக மாறிவிடுவார். அதிகம் உணர்ச்சிவசப்படுவார். பார்வை தெளிவாக இருக்காது. பேச்சுக் குளறும். உடலின் Reflex செயல்படாது. தொடு உணர்வு நன்கு மழுங்கிவிடும். எதையேனும் எடுக்க வேண்டும் என்றால் கை அந்தப் பொருளின் பக்கத்தில் போய்த் துழாவிக்கொண்டிருக்கும். காரணம் பார்வை, மூளை, கை இவற்றிற்கிடையேயான ஒத்திசைவு இல்லாமல் போயிருக்கும். வலி தெரியாது.

BAC 0.25ல் இருந்து 0.4 சதவீதம் இருக்கையில், மட்டையாகி விடுவார். எந்தவொரு வெளித்தூண்டல்களும் அவரைப் பாதிக்காது. எழுந்து நிற்க முடியாது, நடக்க முடியாது. வாந்தி எடுக்கலாம். நினைவு தப்பிவிடலாம்.

BAC 0.35ல் இருந்து 0.50 சதவீதம் இருக்கையில், நினைவு முழுவதும் தப்பிவிடும். Reflex சுத்தமாகப் போய்விடும். கருவிழிகூட வெளிச்சத்தில் சுருங்காது விரியாது. உடல் சில்லிட்டுப் போகும். மூச்சு விடுதல் குறைந்து போகும். இதயத் துடிப்பு குறைந்து விடும். இறந்து போக அதிக வாய்ப்புள்ளது."

Address

1/4 Venkatramaiyar Street, Nadimuthu Nagar
Pattukkottai
614602

Opening Hours

Monday 7am - 9pm
Tuesday 7am - 9pm
Wednesday 7am - 9pm
Thursday 7am - 9pm
Friday 7am - 9pm
Saturday 7am - 9pm
Sunday 7am - 8pm

Telephone

+919940961772

Alerts

Be the first to know and let us send you an email when ArasuLabs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ArasuLabs:

Share

Category