09/08/2026
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் C. ஜோசப் விஜய் அவர்களுக்கும், கழகத்தின் பொதுச்செயலாளர்,ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ஆனந்த் அவர்களுக்கும், என்மீது நம்பிக்கை வைத்து திருநெல்வேலி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் என்ற புதிய பொறுப்பை வழங்கியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏
ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றி வரும் நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள இந்தப் புதிய பொறுப்பை மிகுந்த பணிவுடனும் அர்ப்பணிப்புடனும் ஏற்றுக்கொள்கிறேன்.
தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி தெற்கு மாவட்டத்தில் கழகத்தை மேலும் வலுப்படுத்தி, மக்களின் நலனுக்காகவும், கழகத்தின் வளர்ச்சிக்காகவும் அயராது உழைப்பேன்.என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்பை வழங்கிய கழகத் தலைமையினருக்கும், கழக நிர்வாகிகளுக்கும், உடன்பிறப்புகளுக்கும், ராதாபுரம் மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்