Dr M.Radha MD, DM-Gastro

Dr M.Radha MD, DM-Gastro Consultant Gastroenterologist, Hepatologist & Endoscopist

நேற்று மதியம் இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரியில் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சைமா அறக்கட்டளை இணைந்து நடத்திய குழந்தை தி...
13/01/2026

நேற்று மதியம் இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரியில் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சைமா அறக்கட்டளை இணைந்து நடத்திய குழந்தை திருமணம் ஒழிப்பு கருத்தரங்கத்தில் குழந்தை திருமணம் ஒழிப்பில் சமூகத்தின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினேன். மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் திரு செல்வ அழகு 1098 எண்ணின் அவசியம் மற்றும் இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய தலைமை கான்ஸ்டபிள் கயல்விழி காவல் உதவி ஆப் மாணவிகளுக்கு அவசர காலத்தில் எப்படி உதவும் என்பதையும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்ட உதவிகள் குறித்து வழக்கறிஞர் பகத்சிங் உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் திரு இராமகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை சைமா அறக்கட்டளை திரு இராஜ கோபால் ஒருங்கிணைத்து நிறைவு செய்தார்.

#1098


ஞாயிறு காலை 9.00 மணிக்கு  இராஜபாளையம் மலையடிப்பட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் பொது மருத்துவ முகாம் மற்றும் கண் சிகி...
11/01/2026

ஞாயிறு காலை 9.00 மணிக்கு இராஜபாளையம் மலையடிப்பட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் பொது மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதை இராஜபாளையம் ராதா மருத்துவ மனை மருத்துவர் Rtn.Dr.M. ராதா MD.DM (Gastro)
சக்தி கண் மருத்துவமனை Rtn.Dr. ராஜேஷ் மற்றும் இராஜபாளையம் ரோட்டரி சங்கம் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் D.S.P.
ஃபஸீனா பீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை ஆற்றினார்.
காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இலவச சர்க்கரை அளவு பரிசோதனை, இரத்த அழுத்தம், ஈசிஜி, ஹெபடைடிஸ் பி மற்றும் சி பரிசோதனை மற்றும் கண் பரிசோதனைகள்
மேற்கோள்ளப்பட்டது.



16/12/2025
24/10/2025
மதுரை மண்டல மருத்துவ அணியின் சமூகநீதி மற்றும் பகுத்தறிவு பாசறைக் கூட்டம் ஏப்ரல் 20 ந்தேதி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில...
19/04/2025

மதுரை மண்டல மருத்துவ அணியின் சமூகநீதி மற்றும் பகுத்தறிவு பாசறைக் கூட்டம் ஏப்ரல் 20 ந்தேதி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள லலிதா மகாலில் நடைபெற்ற உள்ளது அனைத்து உடன்பிறப்புகளும் வந்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்
மரு. இராதா எம் டி டி எம்
மாவட்ட அமைப்பாளர்
திமுக மருத்துவ அணி
விருதுநகர் தெற்கு மாவட்டம்





மதுரை மண்டல மருத்துவ அணியின் சமூகநீதி மற்றும் பகுத்தறிவு பாசறைக் கூட்டம் ஏப்ரல் 20 ந்தேதி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில...
19/04/2025

மதுரை மண்டல மருத்துவ அணியின் சமூகநீதி மற்றும் பகுத்தறிவு பாசறைக் கூட்டம் ஏப்ரல் 20 ந்தேதி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள லலிதா மகாலில் நடைபெற்ற உள்ளது அனைத்து உடன்பிறப்புகளும் வந்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்
மரு. இராதா எம் டி டி எம்
மாவட்ட அமைப்பாளர்
திமுக மருத்துவ அணி
விருதுநகர் தெற்கு மாவட்டம்



மதுரை மண்டல மருத்துவ அணியின் சமூகநீதி மற்றும் பகுத்தறிவு பாசறைக் கூட்டம் ஏப்ரல் 20 ந்தேதி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில...
19/04/2025

மதுரை மண்டல மருத்துவ அணியின் சமூகநீதி மற்றும் பகுத்தறிவு பாசறைக் கூட்டம் ஏப்ரல் 20 ந்தேதி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள லலிதா மகாலில் நடைபெற்ற உள்ளது அனைத்து உடன்பிறப்புகளும் வந்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்
மரு. இராதா எம் டி டி எம்
மாவட்ட அமைப்பாளர்
திமுக மருத்துவ அணி
விருதுநகர் தெற்கு மாவட்டம்





DMK Medical Wing - திமுக மருத்துவ அணி

தொகுதி மறுசீரமைப்பு - நியாமான ஒதுக்கீடுமாண்புமிகு தமிழக முதலமைச்சர் திராவிட மாடல் அரசின் நாயகன் கூட்டியுள்ள இந்த வரலாறு ...
22/03/2025

தொகுதி மறுசீரமைப்பு - நியாமான ஒதுக்கீடு

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திராவிட மாடல் அரசின் நாயகன் கூட்டியுள்ள இந்த வரலாறு சிறப்பு வாய்ந்த கூட்டம் மாநில சுயாட்சிக்கு ஆதரவாக எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகம் முதல் ஆளாக குரல் கொடுக்கும் என்பதை நிருபித்து உள்ளது.

தொகுதி மறுசீமைப்பு
2021 ஆம் எடுக்க வேண்டிய மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்பட வேண்டிய மறுசீரமைப்பு கொரோனா கால நெருக்கடி மற்றும் சில அரசியல் காரணங்களால் 2026 ஆம் ஆண்டு எடுக்கப்படும் என்றும் இந்த மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்னும் அறிவிப்பு தென்னிந்தியாவில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து Joint Action Committee ஒன்றை நிறுவி அதனுடைய முதல் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
தற்போது 543 தொகுதி 1971 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகையில் அடிப்படையில் உள்ளது.
அந்த சமயத்தில் மக்கள் தொகை பெருக்கம் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கிறது என்று மக்கள் தொகையை தீவிரமாக கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தீர்மானித்து போட்ட செயல்திட்டத்தை சரியாக நிறைவேற்றிய தென் மாநிலங்கள் இன்று இந்த தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தில் பாதிக்கப்படுகின்றன.

அரசியலமைப்பின் பிரிவு 82 மற்றும் 170, வின் படி மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் உள்ள இடங்களின் எண்ணிக்கை மற்றும் பிராந்திய தொகுதிகளாகப் பிரிப்பது ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

இந்த 'எல்லை நிர்ணய செயல்முறை' பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 'எல்லை நிர்ணய ஆணையத்தால்'(Delimitation Committee) செய்யப்படுகிறது.
இதுவரை 1951, 1961 மற்றும் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.
2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி செய்யப்பட்டு இருக்க வேண்டிய மறுசீரமைப்பு அப்போது இருந்த அரசாங்கத்தால் 25 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது 2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய உள்துறை அமைச்சர் தமிழ் நாடு பாதிக்கப்படுமாறு இருக்காது என்று சொன்னாலும் மற்ற இடங்களில் தொகுதி எண்ணிக்கை உயர்த்தப்பட மாட்டோம் என்று கூறவில்லை.
இந்த நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 லிருந்து 31 ஆக குறையும்.

இது போல் இல்லாமல் தமிழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அப்படியே வைத்துக் கொண்டு மற்ற மாநிலங்களில் மறுவரையறை செய்து 848 என்று கொண்டு வரும் போது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்

ஜனநாயகம் என்பது 'மக்களால் ஆட்சி அல்லது அரசாங்கம்' என்று பொருள். இதன் பொருள், 'ஒரு குடிமகன் - ஒரு வாக்கு - ஒரு மதிப்பு' என்ற பரந்த கொள்கையுடன் பெரும்பான்மையினரால் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

1951, 1961 மற்றும் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவையில் இடங்களின் எண்ணிக்கை முறையே 36.1, 43.9 மற்றும் 54.8 கோடியாக இருந்தபோது 494, 522 மற்றும் 543 என நிர்ணயிக்கப்பட்டது. இது பொதுவாக ஒரு இடத்திற்கு சராசரியாக 7.3, 8.4 மற்றும் 10.1 லட்சம் மக்கள்தொகையாக இருந்தது.

தற்போதைய மறு சீரமைப்பு தென் இந்திய மாநிலங்கள் மற்றும் வடக்கில் உள்ள சிறிய மாநிலங்களான பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட், அதே போல் வடகிழக்கு மாநிலங்களும் வடகிழக்கு மாநிலங்களான உத்தரபிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பாதகமாக இருக்கும்.

எனவே இந்த பாதிப்பு அடைய கூடிய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் கூடிய இந்த கூட்டம் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் வகிக்கும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது.

இராஜபாளையம்  கிங் சிட்டி ரோட்டரி சங்கம் நடத்திய பரிபூரணி - மூன்றாவது ஆண்டு மகளிர் தின கொண்டாட்டத்தில் சாதனை புரிந்த மகளி...
21/03/2025

இராஜபாளையம் கிங் சிட்டி ரோட்டரி சங்கம் நடத்திய பரிபூரணி - மூன்றாவது ஆண்டு மகளிர் தின கொண்டாட்டத்தில் சாதனை புரிந்த மகளிர்களுக்கான விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
இதில் 3212 ரோட்டரி மாவட்டத்தின் வருங்கால ஆளுநர் Rtn தினேஷ் பாபு அவர்களின் பரிந்துரையின் பேரில் எனக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதற்காக நான் DGE Rtn தினேஷ் பாபு அவர்களுக்கும் இராஜபாளையம் கிங் சிட்டி ரோட்டரி அமைப்பினருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

Drone டெக்னாலஜி , Vasu Vlogs Gayu ஹெர்பல்ஸ், சிஎம் டிராபி வெற்றி பெற்ற இளம் சிறார், பொறியியல் கல்லூரி துணை முதல்வர், வெளிநாட்டு கம்பெனிகளில் நிர்வகிக்கும் வாழ்நாள் சாதனையாளர் என்று பல்வேறு தரப்பில் சாதனை படைத்த பெண்களுக்கு இந்த இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

3212 ரோட்டரி மாவட்டத்தின் கவர்னர் திரு மீரான்கான் சலீம் அவர்கள் சிறப்புரையாற்றும்போது 104 வயதான பாட்டி கல்வி கற்கும் ஆர்வத்தில் எல்கேஜி சேர்ந்து இன்று நாலாம் வகுப்பு படிக்கும் நிகழ்வு பற்றி பேசியது சிறப்பாக இருந்தது. ஆங்கிலம் என்பது கற்றுக்கொள்ள மிகவும் சுலபமான மொழி என்றும் அந்த பாட்டி பதிலளித்த நிகழ்ச்சி கேட்டவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சிறப்பு விருந்தினர் Femi 9 நிறுவனர் திருமதி கோமதி அவர்கள் பெண்களுக்கு தொழிலில் ஏற்படும் தடைகளையும், அதை பெண்கள் எவ்வாறு தடுத்து வர வேண்டும் வேண்டும் என்றும், அவரது வளர்ச்சிக்கு காரணமானவர்களையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

ஒவ்வொரு இடங்களில் ஏற்பட்ட போட்டிகளையும் எவ்வாறு சமாளிப்பது என்று விவரித்து பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பரிபூரணி நிகழ்ச்சியின் செகரட்டரி காருண்யா அவர்கள் மிகவும் அழகாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியின் சேர்மன் திருமதி சஹானா பீமானந்த் அவர்கள் திறம்பட ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்

AGD Rtn Dr M Radha MD.DM
RC Rajapalayam

நேற்று மாலை சிவகாசி சுப்ரீம் ரோட்டரி சங்கத்தின் வாராந்திர நிகழ்வு வருங்கால துணை ஆளுநர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியாக நடந்த...
14/02/2025

நேற்று மாலை சிவகாசி சுப்ரீம் ரோட்டரி சங்கத்தின் வாராந்திர நிகழ்வு வருங்கால துணை ஆளுநர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியாக நடந்தது. இதில் வருங்கால துணை ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு கணேசன் மூர்த்தி, திரு செந்தில்குமார் அவர்களுடன் சேர்ந்து நானும் கௌரவிக்கப்பட்டேன்.

இந்த நிகழ்ச்சியை சிவகாசி சுப்ரீம் ரோட்டரி சங்கத் தலைவர் திரு கருப்பசாமி அவர்கள் வரவேற்பு செய்ய சங்க செயலாளர் திரு சரவணன் பிரகாஷ் அவர்கள் சென்ற கூட்டத்தின் முக்கிய நிகழ்வுகளை எடுத்துரைத்தார். போன நிகழ்ச்சியில் இலவச கண் சிகிச்சை முகாமில் சுமார் 200 பேருக்கும் மேலாக கலந்து கொண்டு சிறப்பாக அமைந்தது என்று கூறினார்.

ரோட்டரி துணை ஆளுநர் லியோ ராபர்ட் சிறப்புரையாற்றினார். ரோட்டரி கிளப்பின் தூணாக விளங்கும் திரு செல்வராஜ் அண்ணாச்சி அவர்கள் நன்றியுரை வாசித்தார்கள். மிகவும் அழகாக இருந்தது. என்னை இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி கௌரவித்த சிவகாசி சுப்ரீம் ரோட்டரி சங்கத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் இந்த வருங்காலத்தில் என்னை ஆளுநராக பணி செய்வதற்கு என்னை பரிந்துரை செய்த ராஜபாளையம் ரோட்டரி சங்கத்திற்கும், என்னை தேர்வு செய்த சார்ச்சி அணித் தலைவர் வருங்கால கவர்னர் திரு தினேஷ் பாபு அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற கண் சிகிச்சை மருத்துவ முகாமில் பங்கு பெற்ற நோயாளிகளின் 25 பேருக்கு இலவசமாக கண் கண்ணாடி தரப்பட்டது. அதை கொடுப்பதற்கு வாய்ப்பு கொடுத்த சங்கத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சங்கத்தின் வாராந்திர இதழை நாங்கள் மூன்று வருங்கால துணை ஆளுநர்கள் இணைந்து வெளியிட்டோம்.
இந்த நிகழ்ச்சிக்கு ஏழு மணிக்கு வருகை தந்த ரோட்டரி உறுப்பினர்களுக்கும் சிறப்பு பரிசு தந்து கெளரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகாசி ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் திரு சண்முக நடராஜன் திரு பாலமுரளி கிருஷ்ணா மற்றும் இந்த ரோட்டரி சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

நேற்றைய நிகழ்வு மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது என்னுடைய கல்லீரல் காப்போம் புத்தகத்தை குறிப்பிட்டு பேசி அறிமுகப்படுத்தியது மிகவும் சிறப்பாக இருந்தது அடுத்த என் சார்பில் இரண்டு மருத்துவ முகாம்கள் இந்த ரோட்டரி சங்கத்திற்காக செய்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளேன்.

எப்போதுமே இயங்கிக் கொண்டு இருக்கும் ஒரு சங்கத்துடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை தர வல்லது "அகிலம் இணைவோம் அன்பாலே" என்ற டீம் சார்ச்சியின் குறிக்கோள் தனது முதல் அடியை Zone 11 ல் எடுத்து வைத்துள்ளது

Address

181, Periya Kadai Bazzar
Rajapalayam
626117

Alerts

Be the first to know and let us send you an email when Dr M.Radha MD, DM-Gastro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr M.Radha MD, DM-Gastro:

Shortcuts

Share

Category