03/06/2026
எச்.ஐ.வி, சிபிலிஸைத் தொடர்ந்து ஹெபடைடிஸ் பி: இலங்கையில் 'மும்மை ஒழிப்பு' திட்டம்! தாய்-சேய் நலம் காக்கும் புதிய மைல்கல்
ஜூன் 1 முதல், தாயிடமிருந்து சேய்க்கு நோய்த்தொற்றுகள் பரவுவதை மேலும் தடுக்கும் நோக்கில், இலங்கையின் சுகாதார அமைச்சு நாடு முழுவதும் உள்ள அனைத்து மகப்பேறு சிகிச்சை நிலையங்களிலும் "மும்மை ஒழிப்பு" (Triple Elimination) திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் (WHO) சான்றளிக்கப்பட்ட, எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் (HIV and Syphilis) ஆகிய நோய்களின் தாய்-சேய் பரவலைத் தடுக்கும் வெற்றிகரமான 'இரட்டை ஒழிப்பு' சாதனையைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த விரிவாக்கப்பட்ட திட்டத்தின் மூலம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான வழக்கமான இரத்தப் பரிசோதனைகளில் தற்போதுள்ள எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் பரிசோதனைகளுடன், ஹெபடைடிஸ் பி (Hepatitis B) வைரஸிற்கான பரிசோதனையும் கட்டாயமாக்கப்பட்டு மருத்துவ நடைமுறை மேம்படுத்தப்பட்டுள்ளது.