07/08/2026
மட்டக்களப்பில் ஒபரேசன் வாட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது
ஒரு நாள்,
அதிகாலை 2 மணியளவில் ஒபரேசன் வாட்டின் டெலிபோன் மணி ஒலிக்கவே....
உடனடியாக எடுத்து பேசினேன்.
மறுமுனையில் ஈட்டியூ நர்ஸ்...
கடும் வயிற்றுவலியோட 35 வயது மேல் (Male) ட்ரான்ஸ்பர் வந்திருக்கு வாங்க.. டொக்டர்... என்று போனை துண்டித்தார்.
வாட்டிலிருந்து அவசரமாக ஓடினேன். வலியில் துடித்துக் கொண்டிருந்த அவருக்கு அவசரமாக வலியை குறைப்பதற்கு தீர்மானிக்க வேண்டிய மருந்துகளை கொடுப்பதற்கு கேட்க வேண்டிய கேள்விகளை அவரிடம் கேட்டுவிட்டு பின்னர் வலியை குறைக்கும் மருந்துகளை கொடுத்து நிலைப்படுத்திய பின்னர்..
சிறிது நேரத்தில் நோவு குறைய ஆரம்பிக்க....
என்ன நடந்தது என கேட்க இனி
நம்மட ஆக்களுக்குகு எல்லாம் அல்சரும் வாயுவும் தானே.....
அவர் சொன்னார் ஒரு கிழமையா அல்சர்....
உங்களுக்கு உடம்புக்கு எப்புடி இருந்து எவடத்த என்ன செஞ்சுது?
இல்ல அல்சர் கூடயும் வாயுக்குளிச போட்டன் குறையல..சக்தியும் வந்திட்டு
மரா உம்மாட்ட அல்சர் குளிசய வாங்கி போட்ட
கொஞ்சம் குறைஞ்ச மாதி இருந்திச்சு...
சரி உங்களுக்கு எவடத்த நோவின?
வவுத்துக்க தான்...
சரி வவுத்துக்கதான்....அது எவடத்த கூட நோவின என்டு ஒரு விரலாலா காட்டுங்க?
பதில்: வவுத்துக்க தான்....
சரி , அப்ப எனனத்துக்கு ஹொஸ்பிட்டல் போன?
வவுரு நோவயும்.
அல்சர் மருந்துக்கு அல்சர் குறைஞ்சிடடு என்டு சொன்னிங்களே?
இல்ல அது உட்டு உட்டு குத்திட்டிருந்திச்சு.
மரா படுக்ககொல உரமா சக்தியும் நோவும் வந்துட்டு....
சரி படுக்ககொல உரமா குத்தின இடத்த காட்டுங்க...
பதில்: அதான் வயித்துல தான் குத்தினன்டு எத்துன தரம் சொல்றன் என்று கோபத்துடன் சொன்னார்.....
நாநோ.... சப்பா... முடியலடா.....
சாமத்தில ஏலான்டு வாரதும்... இப்புடி சம்பவம் செய்றதுமே நம் நாட்டு மக்களின் உலகமகா திறமை என்பது படிக்கும் காலத்திலிருந்தே தெரியுமல்லோ....
இனி கூட வந்த மனைவிய புடிச்சி
வீட்ட இருந்து ஹொஸ்பிட்டல் போக முதல் வயித்தில இந்த இந்த இடங்கள்ல எவடத்த கை வச்சி கத்தினாரு என்டு கேட்டா இனி அவலும் பாக்களியாம் என்டு பதில் சொல்ல....
சரி விடுங்கோ.... ஈட்டீயுக்கு நான் வரக்கொல சுருண்டுட்டு கைஇருந்த இடத்த பாத்தா ஒன்டுபித்தக்கல் அல்லது சதைய அழற்சியாகத்தான் இருக்கோணும்... என முடிவெடுத்துக்கொண்டு...
சரி இனி நோவு கூடி குறைஞ்சுதா,
குத்திச்சா?
முன்னுக்கு குனிஞ்சா குறைஞ்சுதா?
சாராயம் குடிக்குரயா?
இப்புடி இதுக்கு முதல் வந்தயா?
என இன்னும் பல பல கேள்விகளுக்கு மள்ளுக்கட்டி விடை பெற்று சதைய அழற்சி தான் காரணம் என்று முடிவுக்கு வந்து பரிசோதனைகளையும் செய்தால் அதுவும் அதனையை உறுதி செய்ய
டெஸ்டுகளும் அதனையே உறுதி செய்தன....
#சதைய #அழற்சி
சதையும் எமது உடலில் உள்ள முக்கியமான ஹோர்மோன்கள் மற்றும் சமிபாட்டு நொதியங்களை சுரக்கும் ஒரு சுரப்பியாகும்.
சதைய அழற்சியானது திடீரென முதன்மதலாக தாங்க முடியாத வலியுடன் அல்லது நீண்டகாலமாக சிறுசிறு நோவாக இருந்து காலப்போக்கில் அதிகரித்த போவதாக ஏற்படலாம்.
முக்கிய காரணங்கள்
1. பித்தப்பை கற்கள்
2. சாராயம் அருந்துதல்
3. கொலஸ்ட்ரோல்
4. சில மருந்துகள் (நாட்டு மருந்து/ ஆயுள் வேதம்/ ஆங்கில மருந்து)
5. வயிற்றில் அடிபடுதல்
6. கிருமித் தொற்றுகள்
6. சிலருக்கு காரணம் இன்றி (Idiopathic)
அறிகுறிகள்
1.மேல் வயிற்றில் கடுமையான வலி. அந்த வலி முதுகிற்குப் பரவலாம்.
2. குமட்டல் மற்றும் வாந்தி
3. காய்ச்சல்
4. வயிறு உதவுதல்
5. அஜீரணம்
6. கடுமையான நிலையில் ப்ரஸர் குறைதல்
7. சுவாசிக்க சிரமம்
காரணத்திற்கு ஏற்ப சிகிச்சை மாறுபடும்.
உரிய நேரத்திற்கு சிகிச்சை பெறாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்
1. சதையும் இறந்து போகும். இறக்கும் அளவுக்கு ஏற்ப இதனால் சீனி நோய், உயிராபத்து
2. சதையத்தில் கட்டிகள் உருவாகும்
3. மலையகத்தில் கிருமித்தொற்று
4. மலையகத்தில் தொற்றிய கிருமி இரத்தத்தில் பரவி உயிர் ஆபத்து
5. கிட்னி, ஈரல், இதயம் மற்றும் மூளை போன்ற ஏனைய உறுப்புகள் பல செயலிழந்து உயிராபத்து
உரிய நேரத்திற்கு வைத்திய ஆலோசனை பெற்று அவற்றை செயற்படுத்துவதன் மூலம் பாதகமான விளைவுகளை தடுக்கலாம்.
நன்றி
டொக்டர்: MNF. முப்லிஹா
ஆதார வைத்தியசாலை
வாழைச்சேனை