21/05/2026
அன்மையில் ஒருவர் வந்து...
வயிற்றுவலி என்டு இரவு போன எங்கட பிள்ளைக்கி சாப்பாடும் குடுக்காம விடிய விடிய வெச்சிருந்து ஸ்கான் பன்னி என்னமோ அபென்டிஸ் வெடிச்சயாம் என்டு திரும்பயும் சாப்பாடு குடுக்காம வச்சிருக்கு... பிறகு ஒபரேசன் பன்னிட்டு வந்தும் ஒன்டும் குடுக்க உடல.....
என்னமன இப்புடி பட்டினி போட்டு வச்சிருக்காங்க... என ஏதோ தனது உறவினருக்கு உணவு வழங்காமல் அனியாயம் நடந்தது போல கூறினார்.
ஏதேனும் சத்திர சிகிச்சை செய்யப்பட இருக்கும் போது முள்ளந்தண்டில் விறைப்பு மருந்து வழங்கி உடலின் கீழ்ப் பாகத்தில் நோவு தெரியாமல் செய்து அல்லது இரத்தத்தின் ஊடாக மயக்க மருந்து வழங்கி முற்றாக மயக்கி அல்லது இன்னும் சில வேளைகளில் குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் விறைப்பு மருந்து வழங்கி சத்திர சிகிச்சை வழங்கப்படும் போது
ஒருவரது வயது, உடல் நிலை, நீண்டகால பிரச்சினை, சத்திர சிகிச்சைக்கான அவசியத்தை ஏற்படுத்திய காரணம் என்பவற்றை பொருத்து சத்திர சிகிச்சைக்கு முன்னரும், பின்னரும் பொதுவாக திண்ம உணவுகளுக்கு 6 மணித்தியாலங்களும்,
திரவங்களுக்கு 4 மணித்தியாலங்களும், தண்ணீருக்கு 2 மணித்தியாலங்கள் அல்லது முன்னரே கூறியது போல உடல்நிலைக்கும் வயதுக்கும் ஏற்ப நீண்ட நேரமோ பட்டினி வைத்தே சத்திர சிகிச்சை ஆரம்பிக்கப்படும்.
சத்திர சிகிச்சைக்கு பின்னர் மேலும் பொதுவாக 4 தொடக்கம் 6 மணித்தியாலங்கள் பட்டினி வைக்கப்படும். சில நேரங்களில் ஸ்கான், சீட்டி, மற்றும் வேறு சில பரிசோதனைகளுக்காகவும் இவ்வாறு பட்டினி வைக்கப்படும்.
ஆனால் வைத்தியசாலைக்கு வந்தவுடன் நம்மவர்கள் நினைப்பது.... ஆப்பிள், ஒரேஞ் மற்றும் திராட்சைப்பழத்தையும் சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் உடனடியாக நோய் குணமாகிவிடும்.
இவர்கள் அனியாயமாக நமது உறவினர்களை பட்டினி போட்டுள்ளார்கள் என்ற மேலதிக என்னம் வேறு....... அவர்கள் மட்டுமல்ல சிலவேளைகளில் வாட்டுக்குள் வேலை செய்யும் சக ஊழியர்கள் கூட புரிந்து கொள்வதில்லை..... ஒபரேசன் தியேட்டரினுள் உணவு தண்ணீர் இல்லாமல் ஓய்வின்றி ஒபரேசன் செய்பவர்களுக்கு கோல் எடுத்து இன்னார்ட ஆக்கள் கேட்காங்க அவங்கள எத்தன மணிக்கு தியேட்டருக்கு எடுப்பிங்க? சாப்பாடு குடுக்கயா என்டு என.......
இவ்வாறு ஒருவரை பட்டினி வைத்திருப்பதனால் எந்த ஒரு சுகாதார சேவை வழங்குனருக்கும் எந்த ஒரு நன்மையும் இல்லை...
பலர் நினைப்பது போல உணவு தண்ணீர் இல்லாமல் நாள் முழுக்கு சத்திர சிகிச்சை செய்வதனால் அதற்காக வைத்தியர்களுக்கு சத்திர சிகிச்சைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேலதிக கொடுப்பனவு எதுவும் இல்லை...
அப்படி எனில் ஏன் அவ்வாறு பட்டினி வைக்கிறார்கள்?
பொதுவாக மயக்க மருந்துகளுக்கு வாந்தியை ஏற்படுத்தும் தன்மை உண்டு. அத்தோடு அது உங்களது உணவுப் பாதையின் இறுக்கிக் தசைகளை தளர்த்துவதோடு குடல் அசைவுகளையும் குறைக்கும்.
எனவே சத்திர சிகிச்சையின் போது அல்லது அதற்கு பின்னர் வாந்தி ஏற்பட வாய்ப்பு அதிகம்.
அவ்வாறு வாந்தி ஏற்படும்போது அது உங்களது மூச்சுக்குழாயினுள் சென்று உயிராபத்தை ஏற்படுத்தும்.
குடலில் அல்லது குடலை அண்டிய பகுதிகளில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளும்போது குடலில் உள்ள உணவு அல்லது மலம் உங்களது வயிற்றினுள் கசிய வாய்ப்பு உண்டு.
அதனால் ஏற்படும் பாதிப்பினால் வயிற்றினுள் கிருமி தொற்றுதல், காயங்களில் கிருமி கொற்றுதல், மற்றும் உயிராபத்து உண்டு....
சுருக்கமாக கூறினால்: உங்கள் உயிரைக் காப்பதற்கே உங்களது உணவு மற்றும் பானத்தை தியாகம் செய்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொண்டால் சத்திர சிகிச்சை வாட்டுக்களில் ஏற்படும் தேவையற்ற முரன்பாடுகள் பெருமளவில் தவிர்க்கப்படும்..... அத்தோடு உங்களுக்கு யாரும் தீங்கிழைக்கவில்லை மாறாக உங்களுக்கு நல்லதே செய்கிறார்கள் என்ற புரிந்துணர்வு ஏற்படும்....
நன்றி
டொக்டர்: MNF: Mufliha
ஆதார வைத்தியசாலை
வாழைச்சேனை